சிவசேனா கட்சியின் எதிர்ப்புக்கு இடையே மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கசூரி கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய அவர், எனக்கு அளித்த பாதுகாப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இரு நாட்டு மக்களும் அமைதி மற்றும் நம்பிக்கையை விரும்புகின்றனர். சிறப்பான பாதுகாப்பு அளித்த மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவீசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என பேசினார்.


