ஈரோடு டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தையில் ஹெலிகாப்டர் பயண நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது

10 May 23 helicopter - 2026ஈரோடு அருகே உள்ள கங்காபுரத்தில் டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தை சர்வதேச தரத்துடன்அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து ஜவுளிகள், ஆடைகளை வாங்கிச் சென்று வருகிறார்கள். கோவை, சேலம் 4 வழிச் சாலையில் சுற்றுலாத்தலம் போன்று டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தை அமைந்து இருப்பதால் அந்த வழியாக செல்பவர்களையும் கவர்ந்து வருகிறது. ஈரோடு மாவட்ட மக்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய நிகழ்வுகளை டெக்ஸ்வேலி நிர்வாகத்தினர் அறிமுகம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அதுபோன்ற ஒரு வித்தியாசமான அனுபவத்தைப் பொதுமக்கள் பெறக்கூடிய வகையில் ஹெலிகாப்டர் பயணத்துக்கு டெக்ஸ்வேலி நிர்வாகம் மீண்டும் ஏற்பாடு செய்துள்ளது. இன்று தொடங்க இருக்கும் இந்த ஹெலிகாப்டர் பயணத்துக்கான பயணச்சீட்டு அறிமுகம், விற்பனை தொடக்க நிகழ்ச்சி டெக்ஸ்வேலி வளாகத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து, டெக்ஸ்வேலி செயல் இயக்குநர் டி.பி.குமார் தெரிவிக்கையில்,
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கேட்டுக் கொண்டதன்பேரில், கோடை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெக்ஸ்வேலி ஹெலிகாப்டர் பயணத்தை ஏற்பாடு செய்து உள்ளது. ஒரு முறை பயணம் செய்ய ரூ. 3,200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெறும் பயணம் மட்டுமின்றி ஹெலிகாப்டர் குறித்த தகவல்களையும்
மக்களுக்கு கற்றுக் கொடுக்கும் வகையில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

மே 29-ஆம் தேதி வரை நடைபெறும் ஹெலிகாப்டர் பயணம் தினமும் காலை 8 முதல் பகல் 12 மணி வரையும், பிற்பகல் 3.30 முதல் மாலை 6 மணி வரையும் வானில் பறக்கும். அதற்கான டிக்கெட்டுகள் ஈரோடு லோட்டஸ் டி.வி.எஸ். ஷோரூம், மேஜிக் மொபைல்ஸ் ஷோரூம்கள், எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ், மேட்டுக்கடை யுவபாரதி பள்ளி, டெக்ஸ்வேலியில் கிடைக்கும்.

ஹெலிகாப்டர் பயணம் நடைபெறும் நாள்களில் டெக்ஸ்வேலியில் ஜவுளி, ஆடைகள் வாங்குபவர்களுக்கு, பொருள்களின் மதிப்பின் அடிப்படையில் ஹெலிகாப்டர் பயணக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories