ஈரோடு டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தையில் ஹெலிகாப்டர் பயண நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது

10 May 23 helicopter - 2026ஈரோடு அருகே உள்ள கங்காபுரத்தில் டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தை சர்வதேச தரத்துடன்அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து ஜவுளிகள், ஆடைகளை வாங்கிச் சென்று வருகிறார்கள். கோவை, சேலம் 4 வழிச் சாலையில் சுற்றுலாத்தலம் போன்று டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தை அமைந்து இருப்பதால் அந்த வழியாக செல்பவர்களையும் கவர்ந்து வருகிறது. ஈரோடு மாவட்ட மக்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய நிகழ்வுகளை டெக்ஸ்வேலி நிர்வாகத்தினர் அறிமுகம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அதுபோன்ற ஒரு வித்தியாசமான அனுபவத்தைப் பொதுமக்கள் பெறக்கூடிய வகையில் ஹெலிகாப்டர் பயணத்துக்கு டெக்ஸ்வேலி நிர்வாகம் மீண்டும் ஏற்பாடு செய்துள்ளது. இன்று தொடங்க இருக்கும் இந்த ஹெலிகாப்டர் பயணத்துக்கான பயணச்சீட்டு அறிமுகம், விற்பனை தொடக்க நிகழ்ச்சி டெக்ஸ்வேலி வளாகத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து, டெக்ஸ்வேலி செயல் இயக்குநர் டி.பி.குமார் தெரிவிக்கையில்,
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கேட்டுக் கொண்டதன்பேரில், கோடை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெக்ஸ்வேலி ஹெலிகாப்டர் பயணத்தை ஏற்பாடு செய்து உள்ளது. ஒரு முறை பயணம் செய்ய ரூ. 3,200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெறும் பயணம் மட்டுமின்றி ஹெலிகாப்டர் குறித்த தகவல்களையும்
மக்களுக்கு கற்றுக் கொடுக்கும் வகையில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

மே 29-ஆம் தேதி வரை நடைபெறும் ஹெலிகாப்டர் பயணம் தினமும் காலை 8 முதல் பகல் 12 மணி வரையும், பிற்பகல் 3.30 முதல் மாலை 6 மணி வரையும் வானில் பறக்கும். அதற்கான டிக்கெட்டுகள் ஈரோடு லோட்டஸ் டி.வி.எஸ். ஷோரூம், மேஜிக் மொபைல்ஸ் ஷோரூம்கள், எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ், மேட்டுக்கடை யுவபாரதி பள்ளி, டெக்ஸ்வேலியில் கிடைக்கும்.

ஹெலிகாப்டர் பயணம் நடைபெறும் நாள்களில் டெக்ஸ்வேலியில் ஜவுளி, ஆடைகள் வாங்குபவர்களுக்கு, பொருள்களின் மதிப்பின் அடிப்படையில் ஹெலிகாப்டர் பயணக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories