ஈரோடு டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தையில் ஹெலிகாப்டர் பயண நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது

10 May 23 helicopter - 2026ஈரோடு அருகே உள்ள கங்காபுரத்தில் டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தை சர்வதேச தரத்துடன்அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து ஜவுளிகள், ஆடைகளை வாங்கிச் சென்று வருகிறார்கள். கோவை, சேலம் 4 வழிச் சாலையில் சுற்றுலாத்தலம் போன்று டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தை அமைந்து இருப்பதால் அந்த வழியாக செல்பவர்களையும் கவர்ந்து வருகிறது. ஈரோடு மாவட்ட மக்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய நிகழ்வுகளை டெக்ஸ்வேலி நிர்வாகத்தினர் அறிமுகம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அதுபோன்ற ஒரு வித்தியாசமான அனுபவத்தைப் பொதுமக்கள் பெறக்கூடிய வகையில் ஹெலிகாப்டர் பயணத்துக்கு டெக்ஸ்வேலி நிர்வாகம் மீண்டும் ஏற்பாடு செய்துள்ளது. இன்று தொடங்க இருக்கும் இந்த ஹெலிகாப்டர் பயணத்துக்கான பயணச்சீட்டு அறிமுகம், விற்பனை தொடக்க நிகழ்ச்சி டெக்ஸ்வேலி வளாகத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து, டெக்ஸ்வேலி செயல் இயக்குநர் டி.பி.குமார் தெரிவிக்கையில்,
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கேட்டுக் கொண்டதன்பேரில், கோடை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெக்ஸ்வேலி ஹெலிகாப்டர் பயணத்தை ஏற்பாடு செய்து உள்ளது. ஒரு முறை பயணம் செய்ய ரூ. 3,200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெறும் பயணம் மட்டுமின்றி ஹெலிகாப்டர் குறித்த தகவல்களையும்
மக்களுக்கு கற்றுக் கொடுக்கும் வகையில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

மே 29-ஆம் தேதி வரை நடைபெறும் ஹெலிகாப்டர் பயணம் தினமும் காலை 8 முதல் பகல் 12 மணி வரையும், பிற்பகல் 3.30 முதல் மாலை 6 மணி வரையும் வானில் பறக்கும். அதற்கான டிக்கெட்டுகள் ஈரோடு லோட்டஸ் டி.வி.எஸ். ஷோரூம், மேஜிக் மொபைல்ஸ் ஷோரூம்கள், எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ், மேட்டுக்கடை யுவபாரதி பள்ளி, டெக்ஸ்வேலியில் கிடைக்கும்.

ஹெலிகாப்டர் பயணம் நடைபெறும் நாள்களில் டெக்ஸ்வேலியில் ஜவுளி, ஆடைகள் வாங்குபவர்களுக்கு, பொருள்களின் மதிப்பின் அடிப்படையில் ஹெலிகாப்டர் பயணக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories