இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவர் பிரேத பரிசோதனைக்கு முன் உயிருடன் எழுந்தால் சிக்கலில் அரசு மருத்துவர்

Published:

ரமணா திரைப்படத்தில் இறந்து போன ஒருவரை உயிருடன் இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனை ஒன்று பணம் பறிப்பதாக இருக்கும் காட்சி தனியார் மருத்துவமனைகள் செயல்படும் அவலத்தை காட்டியது.

ஆனால் மேற்குரிய சம்பவத்திற்கு நேரெதிராக, மும்பையில் நடைபெற்றுள்ள சம்பவம் அரசு மருத்துவமனைகள் செயல்படும் லட்சணத்திற்கு மற்றொரு உதாரணமாக மாறியுள்ளது. நேற்று மதியம் மும்பையின் பேருந்து நிறுத்ததில் மயங்கிகிடந்த 45 வயது ஆண் ஒருவர் போலீஸ் உதவியுடன், அருகில் இருந்த சீயோன் மருத்துவமனை என்று அழைக்கப்படும் நகராட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அப்போது பணியில் இருந்த தலைமை மருத்துவ அதிகாரி ரோஹன் அந்த மனிதரின் நாடியை பரிசோதித்துவிட்டு அவர் இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டார். மேலும் அவர் மருத்துவமனை ஆவணங்களிலும் அவர் இறந்துவிட்டதாக தன் கைப்பட எழுதியுள்ளார்.

இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட அந்த மனிதரை மருத்துவமனையின் பிணவறைக்கு ஊழியர்கள் எடுத்துச்சென்றனர். அப்போது ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்தவர் மூச்சுவிடுவதை ஊழியர்கள் கவனித்துள்ளனர். உடனடியாக அவர்கள் மருத்துவரை அழைத்துள்ளனர்.

தான் இறந்துவிட்டதாக கூறியவர் உயிருடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த டாக்டர், அந்த நபரை உடனடியாக மற்றொரு பிரிவுக்கு மாற்றிவிட்டு அவர் இறந்துவிட்டதாக எழுதப்பட்டிருந்த ஆவணங்களை கிழித்து எரிந்து தடயங்களை மறைத்துள்ளார். ஆனால் தற்போது இந்த விஷயம் முழுவதும் வெளியானதால் தலைமை மருத்துவ அதிகாரி ரோஹகனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img