நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு விசாரணைகளை முடிக்க சிபிஐ.க்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published:

2ஜி ஊழலையடுத்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மற்றொரு ஊழல் விவகாரம் நிலக்கரி சுரங்க முறைகேடு.நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான அனைத்து விசாரணைகளையும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு என்பது, ‘‘மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது நிலக்கரி வளங்களை பொது ஏல முறையில் உயர்ந்த ஏலதாரருக்கு வழங்காமல், முறையற்ற மற்றும் விதிகளின்றி 142 நிலக்கரி நிலத்தொகுதிகளை தனியார் மற்றும் பங்கு சந்தையிலுள்ள பொது நிறுவனங்களுக்கு சுரங்கம் அமைக்க உரிமம் வழங்கியதால் அரசுக்கு சுமார் 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக” தலைமை கணக்காயர் அலுவலகம் தெரிவித்த குற்றம்சாட்டே ஆகும்.

இந்த முறைகேடு தொடர்பான பல்வேறு வழக்குகளை உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமராக இருந்த காலத்தில் சுரங்கத் துறையையும் சேர்த்து கவனித்து வந்ததால் வழக்கில் அவரையும் சேர்க்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்தது. ஆனால், சிபிஐ இந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

தற்போது, வழக்கு தொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சிபிஐ.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img