லஞ்ச வீடியோ வெளியாகி நெருக்கடி: பிஹார் அமைச்சர் குஷ்வாஹா ராஜினாமா

பாட்னா:

பிஹாரில் மாநில அமைச்சர் அவதேஷ் குமார் குஷ்வாகாவும் லாலு கட்சியின் வேட்பாளர் முத்ரிகா யாதவும் லஞ்சம் வாங்கியது தொடர்பான வீடியோ வெளியானதையடுத்து, தனது அமைச்சர் பதவியை குஷ்வாகா ராஜினாமா செய்தார்.

ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவரான குஷ்வாகா, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ளார். கிழக்கு சம்பரன் மாவட்டம், பிப்ரா தொகுதியில் போட்டியிடும் இவர், ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் பெறும் ரகசிய வீடியோ நேற்று முன்தினம் வெளியானது.  தொடர்ந்து, ஜெகனாபாத் தொகுதியில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் முத்ரிகா யாதவ் லஞ்சம் வாங்குவது போன்ற மற்றொரு வீடியோவும் வெளியானது.

இந்நிலையில், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் வசிஷ்ட நாராயண் சிங் ஆகியோர், இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில், குஷ்வாகாவை பதவி விலகுமாறு கேட்டுக் கொள்வதாகவும், பிப்ரா தொகுதியின் வேட்பாளரை மாற்றுவது என்றும் முடிவு எடுத்ததாகத் தெரிகிறது.

இந்தத் தகவல் வெளியானதும், குஷ்வாகா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை ஆளுநரின் ஒப்புதலுக்காக நிதிஷ் குமார் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் தன் மீதான லஞ்சக் குற்றச்சாட்டை குஷ்வாகா மறுத்துள்ளார். “என் மீது லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்ததால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். அரசியல் எதிரிகள் எனக்கு எதிராக சதித் திட்டம் தீட்டி உள்ளனர். எனினும், மக்களின் முன்பு இதுதொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வருவேன்” என்று அவர் கூறியுள்ளார்.

லஞ்ச வீடியோ விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆர்.லட்சுமணன், “அமைச்சரும், மற்றொரு வேட்பாளரும் லஞ்சம் வாங்கியது தொடர்பான வீடியோவுடன் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளோம். அறிக்கை கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பிஹார் பேரவைக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியான இந்த வீடியோவால், நிதிஷ் குமார் தலைமையிலான மெகா கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Topics

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories