முன்பெல்லாம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளிடம் சொத்து மதிப்பினை கேட்டு அறிவதைப்போல இன்று பெரும்பாலோர் சர்கரையின் அளவை கேட்டு அறிந்து கொண்டிருக்கின்றோம். சித்தமருத்துவத்தின் சக்தி தெரியாமல் தான் நாம் ஆங்கில மருந்துகளைத்தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.
சர்க்கரை நோயின் அபரிதமான வளர்ச்சியினால் சர்க்கரை நோயாளிகளை மையமாக வைத்து ஒரு பெரிய வியாபார வலையை பின்னிக் கொண்டிருக்கின்றனர் ஆங்கில மருத்துவத்தினர். அத்துடன் அவர்கள் ஊடகங்கள் வாயிலாக பதினைந்து மற்றும் இருபத்தைந்து நாட்களில் ஆங்கில மருத்துவத்தால் நோயாளிகளை பூரண குணம் அடைய வைக்க முடியும் என விளம்பரங்கள் மூலம் செய்து வருவதை அனைவரும் அறிந்ததே. அதிக பணவிரயம் இன்றி சர்க்கரை நோய்க்கு முழுமையான சித்தமருத்துவ சிகிச்சை மூலம் நீரிழிவு வியாதியைக் கட்டுக்குள் வைக்க மட்டுமே முடியும் என கூறுகிறார் சித்த மருத்துவர் மணிகண்டன். சர்க்கரை நோய் குறித்து மேலும் அவர் கூறுவதாவது:-
சர்க்கரை வியாதி என்பது ஒரு நோயே அல்ல. அது மனித உடலில் ஏற்படும் ஒரு விதமான சக்திகுறைபாடே ஆகும். அந்த குறைபாடு எதனால் வருகிறது என்ற அடிப்படை காரணத்தைக்
கண்டுபிடித்து அதனை சரிபடுத்தி நோய்களை முற்றிலுமாக தீர்க்க முடியும். பொதுவாக ஒருவரின் உடலில் ஏற்படும் சக்திகுறைபாட்டை அவர்களே ஆராய்ந்தால் அடிப்படை காரணங்கள் என்ன வென்று கூர்ந்து கவனித்தால் உணரமுடியும்.சர்க்கரை நோயாளிகளுக்கு பெரும் சவாலாக உள்ள நாவறட்சி,மலக்கட்டு,உடல் சோர்வு மட்டுமே. அது உடலில் உள்ள ராஜ உறுப்புக்களான கணையம், கல்லீரல்,சிறுநீரகம் முதலிய உறுப்புகளின் செயல்பாடு குறைவதால் ஏற்ப்படுகிறது.
அந்த உறுப்புக்களின் செயல்பாடு குறைகளை சித்தமருத்துவ முறையில் சர்க்கரை வில்வம், ஆவாரம் பூ, நாவல் கொட்டை,ஓமம் மற்றும் சிறியா நங்கை போன்ற பல மூலிகைகள் சேர்த்து காயச்சி தயாரான 100% பக்க விளைவு இல்லாத அகஸ்திய சஞ்சீவி சூரணம் மூலம் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தி சீராக்கி நீரிழிவு வியாதியை இரண்டே வாரங்களில் கட்டுப்படுத்த முடியும் என அவர் கூறுகிறார்.
அகஸ்திய சஞ்சீவி சூரணம் பற்றிய சிறப்பம்சங்கள் :-
*இந்த மருந்தை உட்கொண்ட முதல் வாரத்திலேயே உடல்சோர்வு, மலக்கட்டு மற்றும் நாவறட்சியைத் தீர்க்கும்.ஒரே மாதத்தில் சர்க்கரையின் அளவு 420 லிருந்து 210 க்கு குறையும்.
*அலோபதி மருந்துகள் எடுப்பவர்களும் இந்த மருந்தை எடுத்துக்கொள்ளலாம்.
*முதல் இரண்டு வாரங்கள் மூன்று வேளையும் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட வேண்டும்.
*பின்பு சர்கரையின் அளவை கண்டறிந்து அளவைக் கூட்டியோ, குறைத்தோ எடுத்துக்கொள்ளலாம்..
*சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் குறைக்க வல்லது .
*சூரணத்தில் உள்ள ஆவாரம்பூ மற்றும் சீந்தில் கொடி போன்ற மூலிகைகள் சர்க்கரை நோயாளிகளுக்கு உண்டாகும் கை கால் குடைச்சல் மற்றும் பாத எரிச்சலை சரி செய்யும் தன்மை கொண்டது. ஆவாரம்பூ சமூலத்துடன் சிறிது நீர் சேர்த்து அரைத்து பூசினால் பாத எரிச்சலை சரியாக்கும் சக்தி கொண்டது.
இயக்கம் கொடுக்காத உடலுக்கு தங்க பாசாணதைக் கொடுத்தாலும் ஈடேறாது என முன்னோர்கள் அடிக்கடி கூறுவது வழக்கம். நாம் முறையான உணவு பழக்க வழக்கத்தையும், உடல் இயக்கத்தையும் கடைபிடித்தால் எந்தவிதமான நோய்களும் வராது என்பதே நிதர்சனமான உண்மையும் கூட. நமது உடலை பாதுகாப்பது நமது கடைமையாகும்.


