ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் விபச்சார தொழில் செய்த துணை நடிகை உள்ளிட்ட இருவருக்கு சிறை

 

 

சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் அதிக அளவில் உள்ள மசாஜ் சென்டர்கள், பண்ணை வீடுகள், உணவு விடுதியுடன் கூடிய ஏசி அறைகளில் பிற மாநிலப் பெண்களை அழைத்து வந்து விபச்சார தொழிலில் ஈடுபடுத்துவதாக பரவலாக பேசப்படுகிறது.

மேலும், விபச்சார தொழிலை கண்டுகொள்ளாமல் இருக்க சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு மாதம் தோறும் கணிசமான ஒரு பெரும் கப்பதொகை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஒரு சொகுசு பங்களாவிற்க்கு சென்னை போரூர் அடுத்த மாம்பக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கால் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வரும் தூத்துக்குடியை சேர்ந்தவர் ராமஜெயம் (45). நேற்று முன்தினம் என்னை அபிஷா (24)என்ற துணை நடிகை பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்க சென்றாராம்.

அப்போது சொகுசு பங்களாவில் தங்கி இருந்த சரண்ராஜ் (25) என்பவர் கால் டாக்சி டிரைவரும் அபிஷாவும் உல்லாசமாக இருந்தபோது ஆபாசமாக படம் பிடித்தாராம், அதை இணையத்தில் வெளியிடுவதாக கூறி, பணம் கேட்டு மிரட்டியதால் கால் டாக்சி டிரைவர் கானாத்தூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார்.

புகாரில் கால் டாக்சி டிரைவர் கூறியுள்ளதாவது :-

‘நான், கடந்த 24ம் தேதி மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து அபிஷா (24) என்ற பெண்ணை உத்தண்டிக்கு சவாரி ஏற்றி வந்தேன். அப்போது அந்த பெண்ணுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவ்வப்போது உத்தண்டியில் அவர் தங்கியிருந்த ஒரு சொகுசு பங்களாவுக்கு சென்று வருவேன்.

நேற்று முன்தினம் என்னை அபிஷா அவரது வீட்டிற்கு அழைத்தார். நான் அங்கு சென்றவுடன், சரண்ராஜ் என்னை நிர்வாணப்படுத்தி, அபிஷாவுடன் சேர்த்து ஆபாச படம் எடுத்தார். பின்னர் கத்தியை காட்டி, என்னிடம் இருந்த ரூ2000த்தை பறித்தார். மேலும், இந்த படத்தை இன்டர்நெட்டில் வெளியிடாமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும், என மிரட்டுகின்றனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து கானாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் அசோகன் சம்பவ இடத்திற்கு சென்று அபிஷா மற்றும் சரண்ராஜ் ஆகியோரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அபிஷா சில தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்திருப்பதும், நட்சத்திர ஓட்டல்களில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்ததும் தெரிந்தது.

மேலும் இதுபோன்று கால் டாக்சி டிரைவர்கள் மற்றும் வசதிபடைத்தவர்களிடம் பழக்கம் ஏற்படுத்தி கொண்டு அவர்களிடம் பணம் பறித்து வந்ததும் தெரிந்தது.ராமஜெயம் அடிக்கடி பணம் இல்லாமல் இங்கு வந்து செல்வது பிடிக்காததால் தனது நண்பரான சரண்ராஜுடன் சேர்ந்து அவரை வரவழைத்து ஆபாசமாக படம் பிடித்து பணம் பறித்தது தெரிய வந்தது.

புகாரின் அடிப்படையில் அபிஷா, சரண்ராஜ் மீது மிரட்டல், பணம் பறித்தல், ஆபாசமாக படம் எடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் துணை நடிகை அபிஷா மற்றும் சரண்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.அவர்கள் இருவரையும் புழல் சிறையில் காவல் துறையினர் அடைத்தனர்.

சொகுசு பங்களாவில் கால் டாக்சி டிரைவருடன் ஆபாசமாக படம் பிடித்து, அதை இணையத்தில் வெளியிடுவதாக கூறி, பணம் கேட்டு மிரட்டிய துணை நடிகையை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories