ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் விபச்சார தொழில் செய்த துணை நடிகை உள்ளிட்ட இருவருக்கு சிறை

 

 

சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் அதிக அளவில் உள்ள மசாஜ் சென்டர்கள், பண்ணை வீடுகள், உணவு விடுதியுடன் கூடிய ஏசி அறைகளில் பிற மாநிலப் பெண்களை அழைத்து வந்து விபச்சார தொழிலில் ஈடுபடுத்துவதாக பரவலாக பேசப்படுகிறது.

மேலும், விபச்சார தொழிலை கண்டுகொள்ளாமல் இருக்க சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு மாதம் தோறும் கணிசமான ஒரு பெரும் கப்பதொகை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஒரு சொகுசு பங்களாவிற்க்கு சென்னை போரூர் அடுத்த மாம்பக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கால் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வரும் தூத்துக்குடியை சேர்ந்தவர் ராமஜெயம் (45). நேற்று முன்தினம் என்னை அபிஷா (24)என்ற துணை நடிகை பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்க சென்றாராம்.

அப்போது சொகுசு பங்களாவில் தங்கி இருந்த சரண்ராஜ் (25) என்பவர் கால் டாக்சி டிரைவரும் அபிஷாவும் உல்லாசமாக இருந்தபோது ஆபாசமாக படம் பிடித்தாராம், அதை இணையத்தில் வெளியிடுவதாக கூறி, பணம் கேட்டு மிரட்டியதால் கால் டாக்சி டிரைவர் கானாத்தூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார்.

புகாரில் கால் டாக்சி டிரைவர் கூறியுள்ளதாவது :-

‘நான், கடந்த 24ம் தேதி மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து அபிஷா (24) என்ற பெண்ணை உத்தண்டிக்கு சவாரி ஏற்றி வந்தேன். அப்போது அந்த பெண்ணுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவ்வப்போது உத்தண்டியில் அவர் தங்கியிருந்த ஒரு சொகுசு பங்களாவுக்கு சென்று வருவேன்.

நேற்று முன்தினம் என்னை அபிஷா அவரது வீட்டிற்கு அழைத்தார். நான் அங்கு சென்றவுடன், சரண்ராஜ் என்னை நிர்வாணப்படுத்தி, அபிஷாவுடன் சேர்த்து ஆபாச படம் எடுத்தார். பின்னர் கத்தியை காட்டி, என்னிடம் இருந்த ரூ2000த்தை பறித்தார். மேலும், இந்த படத்தை இன்டர்நெட்டில் வெளியிடாமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும், என மிரட்டுகின்றனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து கானாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் அசோகன் சம்பவ இடத்திற்கு சென்று அபிஷா மற்றும் சரண்ராஜ் ஆகியோரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அபிஷா சில தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்திருப்பதும், நட்சத்திர ஓட்டல்களில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்ததும் தெரிந்தது.

மேலும் இதுபோன்று கால் டாக்சி டிரைவர்கள் மற்றும் வசதிபடைத்தவர்களிடம் பழக்கம் ஏற்படுத்தி கொண்டு அவர்களிடம் பணம் பறித்து வந்ததும் தெரிந்தது.ராமஜெயம் அடிக்கடி பணம் இல்லாமல் இங்கு வந்து செல்வது பிடிக்காததால் தனது நண்பரான சரண்ராஜுடன் சேர்ந்து அவரை வரவழைத்து ஆபாசமாக படம் பிடித்து பணம் பறித்தது தெரிய வந்தது.

புகாரின் அடிப்படையில் அபிஷா, சரண்ராஜ் மீது மிரட்டல், பணம் பறித்தல், ஆபாசமாக படம் எடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் துணை நடிகை அபிஷா மற்றும் சரண்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.அவர்கள் இருவரையும் புழல் சிறையில் காவல் துறையினர் அடைத்தனர்.

சொகுசு பங்களாவில் கால் டாக்சி டிரைவருடன் ஆபாசமாக படம் பிடித்து, அதை இணையத்தில் வெளியிடுவதாக கூறி, பணம் கேட்டு மிரட்டிய துணை நடிகையை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories