கட்டிட தொழிலாளிகளாக மாற்றப்பட்ட தமிழக காவல் துறை ஊழியர்கள்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் துறைகளில் மிகவும் முக்கியமானது காவல் துறை. மேலும் தமிழக காவல் துறையை ஸ்காட்லாண்ட் காவல் துறைக்கு இணையாக ஒப்பிட்டு உலக அளவில் அனைவரும் பேசும் அளவுக்கு புகழ் பெற்றது.

உலகிலேயே மிகவும் சிறந்த காவல் துறை தமிழக காவல் துறைதான் என்ற புகழைப் பெற வேண்டும் என்பதற்காக அதில் பணியாற்றும் அனைவரையும் சுதந்திரமாக செயல்பட விட்டு அதிகமான வசதிகளையும் செய்து கொடுத்து தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணி பாதுகாத்து வருகிறார் முதல்வர் ஜெயலலிதா.

அவரது ஆட்சியில் மட்டுமே காவல் நிலையத்திற்குள் கரை வேட்டிகள் புகுந்து அதிகாரிகளை மிரட்டி கட்டப் பஞ்சாயத்து செய்ய முடியாது என்கிற நிலை உள்ளது. ஆனால் காவல் துறையில் மிகப் பெரிய உயர்ந்த பதவியில் அதிகாரியாகப் பணியில் அமர்ந்து கொண்டு, கீழ் நிலையில் மிக நேர்மையாகவும் நியாயமாகவும் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மிகுந்த தலைவலி குடைச்சலை தொடர்ந்து கொடுத்து வரும் அதிகாரிகளும் உள்ளனர்.

அது தவிர காவல் துறை அதிகாரிகள் அவரது கீழ் நிலையில் பணியாற்றும் காவலர்களை அவர்களது வீட்டில் சொந்த பணிகளை செய்ய
நிர்ப்பந்தப்படுத்துவதால் சமையல் வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைகளை கட்டாயமாகச் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு அதிகாரிகளின் சொந்த பணிகளை காவலர்கள் சிலர் செய்து கொண்டு இருப்பதாக காவல் துறை வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

அதிகாரிகள் கொடுக்கும் தொந்தரவுகளால் சில தமிழக காவல் துறை ஊழியர்கள் பணியை நேர்மையாகவும் நியாயமாகவும் செய்ய முடியாமல் மனமுடைந்து தற்கொலை போன்ற முடிவுளை எடுத்து தற்கொலை செய்து கொண்ட சில துயர சம்பவங்களும் கடந்த காலங்களில் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் சென்னை சிறப்பு காவல் படை 10ம் அணியின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெருமாள் என்பவர் காவல் துறை ஊழியர்கள் சிலரை கட்டட வேலை செய்ய நிர்ப்பந்தப்படுத்தி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

அதனால் பாதிக்கப்பட்டு மனமுடைந்த காவலர்கள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெருமாள் என்பவரின் புகைப்படம் எனக் கூறி ஒருவரின் புகைப்படத்தையும், அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும்,காவல் துறை ஊழியர்கள் கட்டட வேலை பார்க்கும் வீடியோவையும் வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவ விட்டுள்ளனர்.அவ்வாறு வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவும் தகவலில் சொல்லப்படும் கீழ்க்காணும் செய்தி தகவலும் கூறப்படுகிறது.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய எங்களை, சென்னை ஆவடி 13ம் பட்டாலியன் டெபுடி கமாண்டன்ட் பெருமாள் அவருக்கு சொந்தமான ஆவடி, சோலைநகர் 3-வது தெருவில் உள்ள வீட்டில் கட்டிட வேலைக்கு பயன்படுத்துகிறார். அதேபோல் பெருமாள் தனசேகர் ஏ.சி வீட்டை விரிவாக்கம் செய்ற வேலையையும் போலீஸ்காரங்க எங்களைத்தான் செய்ய சொல்றார். பெருமாள் காவலராக பணியில் சேர்ந்து பல லட்சக்கணக்கான பணத்தை செலவு செய்து ADSP பதவியை வாங்கியவர். இப்ப பணத்தால் SP பதவியை வாங்க முயற்சி செய்றார். டி.சி. பெருமாள்க்கு ஆல்ரவுண்டராக இருப்பவர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன். இவர்களெல்லாம் கூட்டு சேர்ந்து எங்களை கொடுமைப்படுத்தறாங்க. இந்த கொடுமையில் இருந்து முதல்வர் எங்களை மீட்டு, உயர்அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ரிப்போர்ட்டர் உதவி செய்யுங்க. இதோ வீடியோ ஆதாரம். மராமத்து பணியில் போலீசார், செம்மண் அள்ளும் போலீசார், பெருமாள் போட்டோ, இப்படிக்கு பாதிக்கப்பட்ட சென்னை கடைநிலை காவலர்கள்” என கூறப்பட்டுள்ளது.

காவலர் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா காவல் துறையில் மிக பெரிய உயர்ந்த பதவி அதிகார இருக்கையில் அதிகாரியாக பணியில் அமர்ந்துகொண்டு, கீழ் நிலையில் மிக நேர்மையாகவும் நியாயமாகவும் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மிகுந்த தலைவலி குடைச்சலை தொடர்ந்து கொடுத்து வரும் அதிகாரிகள்மீது கட்டாயம் நடவடிக்கை எடுப்பார் என அனைவரும் நம்புவோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories