சாவுக்கு ஜனாதிபதியே முழுப் பொறுப்பு : தமிழ் அரசியல் கைதிகள்

Published:

 
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு மரணத்தை தழுவுவோம் என்று இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்
 
நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் கடந்த மாதம், சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர். கடந்த 12ஆம் தேதி ஆரம்பித்த தமிழ் அரசியல் கைதிகள்போராட்டம் 17ஆம் தேதி வரையில் நீடித்திருந்தது.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நவம்பர் 7ஆம் தேதிக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக எழுத்துமூலமாக உறுதிப்பாட்டை அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டனர்.
 
இந்நிலையில், நவம்பர் 7ஆம் நெருங்கும் நிலையில், சிறையில் உள்ள தமிழ் கைதிகள் விடுதலை தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி மௌனமாக தமிழ் அரசியல் கைதிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.
 
மேலும் பிணையில் விடுவது சம்பந்தமான பேச்சுகள் மட்டுமே நடைபெறுவதாகவும் அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
வருகின்ற 7ஆம் தேதிக்குள் அவர்களுக்கு சாதகமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கவிட்டால்
மீண்டும் நாம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு சாவைத் தழுவுவோம் என தெரிவித்துள்ளனர்
 
 
மேலும் அவர்கள் சாவுக்கு ஜனாதிபதியே முழுப் பொறுப்பு என்றும் இறந்த பின்னர் அவர்கள் உடல் உறுப்புகளைத் தானம் செய்யும் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கின்றோம் என்றும் அறிவித்துள்ளனர்.

 

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img