ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குர்சரண் சாப்ரா (வயது 65). ஜனதா தள கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் பூரண மது விலக்கு வேண்டியும், லோக் ஆயுக்தா சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
உடல்நலக்குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் கோமா நிலைக்கு சென்றார். நேற்று அதிகாலையில் மருத்துவமனையில் அவர் மரணம் அடைந்தார்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான குர்சரண் சாப்ரா மரணம் குறித்து ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், மதுவுக்கு எதிரான அறப்போராளி உயிரிழந்து விட்டார், இதற்கு உணர்வற்ற ராஜஸ்தான் அரசே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.


