பூரண மது விலக்கு வேண்டி உண்ணாவிரதம் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ மரணம்

Published:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குர்சரண் சாப்ரா (வயது 65). ஜனதா தள கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் பூரண மது விலக்கு வேண்டியும், லோக் ஆயுக்தா சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
 
உடல்நலக்குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் கோமா நிலைக்கு சென்றார். நேற்று அதிகாலையில் மருத்துவமனையில் அவர் மரணம் அடைந்தார்
 
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான குர்சரண் சாப்ரா மரணம் குறித்து ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், மதுவுக்கு எதிரான அறப்போராளி உயிரிழந்து விட்டார், இதற்கு உணர்வற்ற ராஜஸ்தான் அரசே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img