தமிழகத்தில் ஆட்சி நடத்தும் அ.தி.மு.க. அரசு டாஸ்மாக் கடைகளை மூடி பூரண மதுவிலக்கை அறிவிக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர்கள், பெண்கள், என பல அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகஅரசு காவல்துறையினரை பயன்படுத்தி போராட்டம் நடத்துபவர்கள்மீது தாக்குதல் நடத்தி அவர்கள்மீது வழக்கு போட்டு அடக்குமுறையைக் கையாண்டு வருகிறது என்று போராட்டம் நடத்துபவர்கள் கூறுகின்றனர்.
மேலும் தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் மது விற்பனைக்கு தடை விதிக்க சட்டமன்றத்தில் இன்று வரையில் பேசியது இல்லை. எனவே மது விற்பனை என்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவே இல்லை. அந்த முடிவு ஒரு தலைப்பட்சமாக எடுக்கப்பட்ட முடிவு என பெரும்பாலோர் தொடர்ந்து குற்றம்சாட்டியும் வருகின்றனர் .
சிலர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தால் பூரண மது விலக்கை தமிழக அரசு அறிவிக்க நீதிமன்றம் உத்தரவிடும் என நினைத்து முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால் இதுவரை தமிழக அரசு பூரண மது விலக்கை அறிவிப்பதற்கான எவ்விதமான வாய்ப்பும் இல்லை எனப் பொதுமக்களால் கருதப்படுகிறது.
இந்த நிலையில் மது விற்பனைக்கு ஆதரவாகவும் அ.தி.மு.க அரசு செய்த நலத்திட்டங்களைக் கூறி சாதனைப் பட்டியலை அ.தி.மு.க. கட்சியை சேர்ந்த மிக முக்கியமான உறுப்பினர்கள் தொடர்ந்து அளித்து வருகின்றனர் .
தமிழக அரசாங்கத்திற்கும் அ.தி.மு.க. கட்சிக்கும் மற்றும் அவர்கள் கூறி வரும் சாதனைகளுக்கு பொதுமக்கள் பதிலடி கொடுக்கும் வகையில் எவராலோ வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவி வருகிறது.
பொதுமக்கள் வீடியோ வாயிலாக தெரிவிக்கும் கருத்தை கேட்க இந்த செய்தியுடன் இணைத்துள்ள வீடியோவை பார்க்கவும்.