நாமக்கல்:
திமுக தலைவர் கருணாநிதி, கடைசி நிமிடத்தில் தேமுதிகவும் மதிமுகவும் மாறினாலும் மாறும் என்று கூறியுள்ளார். எல்லாக் கட்சிகளும் அவரைத் தேடித்தான் செல்ல வேண்டுமா? ஏன்… நீங்களுந்தான் ஒரு தடவை எங்களைத் தேடி வாருங்கள்…. என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
நாமக்கல் மாவட்டத்தில் ‘மக்களுக்காக மக்கள் பணி’ என்ற பெயரில் மதுவால் சீரழிந்த குடும்பங்கள் மற்றும் கணவரை இழந்த தாய்மார்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம், தேமுதிக சார்பில் பரமத்திவேலூர் அருகே நடந்தது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டு, ரூ.25 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர், திமுக தலைவர் கருணாநிதி, கடைசி நிமிடத்தில் தேமுதிகவும் மதிமுகவும் மாறினாலும் மாறும் என்று கூறி உள்ளார். நீங்கள் ஒரு தடவை எங்களைத் தேடி வாருங்கள். எல்லா கட்சிகளும் அவரைத் தேடித்தான் செல்ல வேண்டுமா? நீங்கள் வாங்களேன்” என்று பேசினார்.


