நீங்கதான் ஒரு தடவை எங்களைத் தேடி வாங்களேன்: கருணாநிதிக்கு விஜயகாந்த் அழைப்பு

Published:

நாமக்கல்:

திமுக தலைவர் கருணாநிதி, கடைசி நிமிடத்தில் தேமுதிகவும் மதிமுகவும் மாறினாலும் மாறும் என்று கூறியுள்ளார். எல்லாக் கட்சிகளும் அவரைத் தேடித்தான் செல்ல வேண்டுமா? ஏன்… நீங்களுந்தான் ஒரு தடவை எங்களைத் தேடி வாருங்கள்…. என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

நாமக்கல் மாவட்டத்தில் ‘மக்களுக்காக மக்கள் பணி’ என்ற பெயரில் மதுவால் சீரழிந்த குடும்பங்கள் மற்றும் கணவரை இழந்த தாய்மார்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம், தேமுதிக சார்பில் பரமத்திவேலூர் அருகே நடந்தது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டு, ரூ.25 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர், திமுக தலைவர் கருணாநிதி, கடைசி நிமிடத்தில் தேமுதிகவும் மதிமுகவும் மாறினாலும் மாறும் என்று கூறி உள்ளார். நீங்கள் ஒரு தடவை எங்களைத் தேடி வாருங்கள். எல்லா கட்சிகளும் அவரைத் தேடித்தான் செல்ல வேண்டுமா? நீங்கள் வாங்களேன்” என்று பேசினார்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img