சேலம் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி இந்திய வரலாற்றில் முதல் முறையாக காவல்துறை பணியில் உதவி ஆய்வாளராக சேர்ந்த பெருமையை பெற உள்ளார்.
காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்காக விண்ணப்பித்த தமிழகத்தை சேர்ந்த திருநங்கை. ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர் அவர்பிரித்திகா யாஷினி என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.
சென்னை உயர் நீதிமன்றம் பிரித்திகா யாஷினி காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கு முழு தகுதி உடையவராக இருப்பதாகவும், எனவே அவருக்கு அந்த பதவியை வழங்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார் பிரித்திகா யாஷினி. ஆனால் திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரித்தது.
அதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்திகா.
மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகா யாஷினியை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்த தேர்வில் பிரத்திகா யாசினி கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். அடுத்து நடைபெற்ற உடல் தகுதி தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம்.
இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தில் மனு செய்தார் பிரத்திகா யாசினி . வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை நேர்காணலில் அனுமதிக்க வேண்டும் என கூறியது நீதிமன்றம்.
அதனால் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையதால் பிரத்திகா யாசினி எழுத்துத்தேர்வுக்கு அவர் அனுமதிக்கப்பட்டு
தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
மேலும் எறி பந்து, 400 மீ. நீளம் தாண்டுதல், ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீ ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து தோல்வியுற்றதாக தமிழக அரசு அறிவித்து அவரை நிராகரித்தது.
அந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு பிரத்திகா யாசினி நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட 100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், பிரித்திகா யாசினி குறித்த வழக்கு 05-11-2015 இன்று விசாரணைக்கு வந்தது. ‘
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழுதகுதி உடையவர் என்றும் அவருக்கு காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணி வழங்க வேண்டும். மேலும் அவர் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பார்.
எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி இந்திய வரலாற்றில் முதல் முறையாக காவல்துறை பணியில் உதவி ஆய்வாளராக சேர்ந்த பெருமையை பெற உள்ளார். தமிழக திருநங்கை பிரித்திகா யாஷினி. ஏற்கனவே காவல்துறை பணியில் இந்திய அளவில் 2 திருநங்கைகள் காவலராக பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.


