உனக்கு தில் இருந்தா நேரா வந்து பேசனும் இல்லை என்னை சீண்டினால் புலியாக மாறுவேன் குஷ்பு கடும் கோபத்துடன் ஆவேசம்!

Published:

 
 
தில் இருந்தால் நேரடியாக பேசனும்.இல்லை என்னை சீண்டினால் புலியாக மாறுவேன். பார்க்க அமைதியாகத்தான் இருப்பேன். என ஹசீனா சையத்துக்கு எதிராய்நடிகை குஷ்பு கடும் கோபத்துடன் ஆவேசமாய் திருப்பூரில் காங்கிரஸ் மாநாட்டில் பேசியுள்ளார்
 
 
காங்கிரஸ் கட்சி நடிகைகளை நம்பி இல்லை என கார்த்தி சிதம்பரம் சொன்ன கருத்துக்கு பதிலளித்த குஷ்பு தங்கபாலு, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் போன்றவர்களை நம்பி காங்கிரஸ் இல்லை என சில நாட்களுக்குமுன் கருத்து கூறியிருந்தார்.
 
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் ஹசீனா சையத் குஷ்புவின் அந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
 
மேலும் அவர் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்து உழைத்து தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களைப் பற்றியும் தேசமே போற்றும் தேசியத் தலைவர்களைப் பற்றியும் சற்று நாவடக்கத்துடன் பேசினால் குஷ்புவுக்கு நல்லது” என அவர் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், சையத் குஷ்புவின் அந்த கருத்துக்கு திருப்பூரில் இன்று நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இதற்கு பதிலளித்தார் குஷ்பு.
 
தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலவும் பிரச்னை குறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், ஒரு பெண்ணுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். அவர் பெயரை சொல்ல கூடவிரும்பவில்லை. நான் தி.மு.க.வில் இருந்தேன். வெளியே வந்தேன். ஏன் வெளியே வந்தேன் என இதுவரை சொல்லவில்லை. கருணாநிதி மீது உள்ள பாசத்தால் சொல்லவில்லை.
 
ஆனால் ஏன் தி.மு.க.வை விட்டு வெளியே வந்தேன் என ஊருக்கே தெரியும் என ஹசீனா சொல்லி இருக்கிறார். உனக்கு தில் இருந்தா நேரா வந்து பேசு. இப்படி பேப்பர்ல பேசுனா, பதிலுக்கு நானும் பேசுவேன். அப்புறம் நீ காணாம போய்டுவே. நான் அமைதியாதான் இருப்பேன். என்னை சீண்டினா புலியா மாறிடுவேன் என்றார் கடும் கோபத்துடன் ஆவேசமாய் ஆவேசமாக.
 
மேலும் தமிழக காங்கிரஸ் கடந்த ஓராண்டில் ஓஹோ என வளர்ந்து வருகிறது. சென்னையில் நான் 30 ஆண்டுகளாக இருக்கிறேன். சத்யமூர்த்தி பவன்எனக்கு எங்கே இருக்கிறது என தெரியாமல் இருந்தது. ஆனால், கடந்த ஓராண்டாகதான் சத்யமூர்த்தி பவன் எங்கு இருக்கிறது என தெரிகிறது. எனக்கு மட்டுமல்ல பலருக்கும் சத்யமூர்த்தி பவன் இருக்கும் இடமே இப்போதுதான் தெரிகிறது. சத்யமுர்த்தி பவன் இந்த ஒராண்டாக தான் செயல்படுகிறது. இப்போது தான் தொண்டர்களும் வந்து செல்கிறார்கள் என்றும் குஷ்பு பேசினார்.

 

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img