வைகோவின் தாயார் காலமானார் : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

Published:

 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் இன்று காலமானார். அவரது  இறுதிச்சடங்கு கலிங்கப்பட்டியில் நடைபெற உள்ளது.வைகோவின் தாயார் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் இன்று காலமானார். அவருக்கு வயது 96 கடந்த உடல்நலக்குறைவால் சில நாட்களாகஅவதிப்பட்டு வந்த அவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்தார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

வைகோவின் தாயார் காலமானா தகவல் சென்னையில் இருந்த வைகோவிற்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. அவர் விமானம் மூலம் நெல்லை புறப்பட்டு வந்தார்.

வைகோவின் தந்தை வையாபுரி. அவர் பல வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இவர்களுக்கு வைகோ, ரவிச்சந்திரன் என்ற 2 மகன்களும் 4 மகள்களும் உள்ளனர். தி.மு.க.வில் வைகோ மாணவர் பருவத்தில் ஈடுபட்டதற்கு வைகோவின் தாயாரும் ஒரு காரணமாகும்.

பின்னர் வைகோ தி.மு.க.வில் இருந்து பிரிந்து தனி கட்சி தொடங்கியபோதும் மாரியம்மாளிடம் ஆசி பெற்றே கட்சியை தொடங்கினார்.அரசியல் மற்றும் சமூக பணிகளில் வைகோவின் தாயார் மாரியம்மாள் அதிக ஆர்வம் உடையவர்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

தமிழ முதலமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் இவரது வீட்டிற்குசென்று மாரியம்மாளை சந்தித்து பேசி உள்ளனர்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் ஒருமுறையும், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டபோதும் மாரியம்மாள் தன்னந்தனியாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

மாரியம்மாள்சமீபத்தில் மதுவிற்கு எதிராக கலிங்கப்பட்டியில் நடந்த போராட்டத்தின் போதும் க லந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img