பூட்டிய வீட்டில் புகுந்து நகை, பணம் கொள்ளை

Published:

பூட்டிய வீட்டில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
 
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே தெற்குகழுநீர்குளம் மேலத்தெருவைச் சேர்ந்த தங்கராஜ் மனைவி மீனாட்சி(55). கணவர் இறந்து விட்டார். இவர்களது மகன் ஆறுமுகராஜ் சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார். தீபாவளிக்காக அவர் ஊர் புறப்பட்டார். இதையொட்டி நேற்று மீனாட்சி வீட்டைபூட்டி விட்டு மகனை அழைக்க திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றார். 
 
அதன் பிறகு தாய்,மகன் இருவரும் இன்று அதிகாலை காரில் ஊர் திரும்பினர். அப்போது இவர்கள் வீட்டின் முன்கேட் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4பவுன் நகை மற்றும் ரூ.8ஆயிரம் திருட்டு போயிருந்தது. வீகேபுதூர். போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img