பூட்டிய வீட்டில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே தெற்குகழுநீர்குளம் மேலத்தெருவைச் சேர்ந்த தங்கராஜ் மனைவி மீனாட்சி(55). கணவர் இறந்து விட்டார். இவர்களது மகன் ஆறுமுகராஜ் சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார். தீபாவளிக்காக அவர் ஊர் புறப்பட்டார். இதையொட்டி நேற்று மீனாட்சி வீட்டைபூட்டி விட்டு மகனை அழைக்க திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றார்.
அதன் பிறகு தாய்,மகன் இருவரும் இன்று அதிகாலை காரில் ஊர் திரும்பினர். அப்போது இவர்கள் வீட்டின் முன்கேட் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4பவுன் நகை மற்றும் ரூ.8ஆயிரம் திருட்டு போயிருந்தது. வீகேபுதூர். போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


