பொது சேவை மையங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும்:ஆட்சியர்

பொது-இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து பட்டா மாறுதல் பெற்றுக்கொள்ளும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆட்சியர் கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.
இதில் ஆட்சியர் பேசியது: மாவட்ட மின் ஆளுமை திட்டத்தின் கீழ் பட்டா மாறுதல் மற்றும் நில உட்பிரிவு செய்தல் ஆகிய பணிகளுக்கான மனுக்களை பொது இ-சேவை மையம் வழியாக இணைய தளத்தில் எளிதாக பதிவு செய்து கொள்ளும் வசதி இன்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்கு அரசு நிர்வாகங்களைத் தேடி அலைந்து கொண்டிருந்த சூழ்நிலையினை மாற்றும் விதமாக தற்போது மக்களைத் தேடி நிர்வாகம் என்ற அடிப்படையில் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 5 வகையான சான்றிதழ்களை இணைய தளம் வழி சேவை மூலம் எளிதில் பெற்றுக்கொள்ளும்முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, பொதுமக்களுக்கு தேவையான பட்டா மாறுதலுக்கு தேவையான மனு செய்வது முதல் அதற்குரிய மாறுதல் உத்தரவு பெறும் வரை அனைத்துப் பணிகளும் இனி இணையதளம் வழியாகவே செயல்படுத்தப்படும். இதற்காக அம்பாசமுத்திரம் வட்டம், முன்னோடி வட்டமாக தேர்வு செய்யப்பட்டு இதுவரை இணையதளம் மூலமாக பெறப்பட்ட 761 உட்பிரிவு அல்லாத மனுக்களுக்கும், 61 உட்பிரிவு மனுக்களுக்கும் உரிய உத்தரவுகள் இணைய தளம் வழியாகவே அனுப்பப்பட்டுள்ளன.

ஆகவே, நமது மாவட்டத்தில் பாளையங்கோட்டை வட்டத்தைச் சார்ந்த பொதுமக்கள் தங்கள் இடத்தில் பட்டா மாறுதல் மற்றும் உட்பிரிவு செய்தல் ஆகிய பணிகளுக்கு பாளையங்கோட்டை வட்டத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் 19 பொது இ-சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் தேவையின்றி பல்வேறு அலுவலகங்களைத் தேடி வீணாக அலைவதைத் தவிர்த்து, இணையதள சேவையினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories