ரஜினியின் காலா படம் பட்டிதொட்டி எங்கும் ரிலீஸ் ஆகி மக்களின் பேராதரவை பெற்று வருகிறது.
ரஜினியின் தூத்துக்குடி பேச்சால் கொஞ்சம் எதிர்ப்பார்ப்பு குறைய ஆரம்பித்தது, இதனால், முதல் நாள் வசூல் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை. அதே நேரத்தில் படத்தின் பாசிட்டிவ் விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் நல்ல வசூல் வர தொடங்கியது.
வசூலில் புது சாதனைகளை நிகழ்த்தி வரும் இப்படத்தை மக்கள் 11 நாள் தாண்டியும் கொண்டாடி வருகின்றனர். படம் சென்னையில் மட்டும் 11 நாளில் ரூ. 10.29 கோடி வரை வசூலித்துள்ளது.
சென்னையில் எந்திரன், கபாலி, காலா என மூன்று படங்களுக்கு ரூ. 10 கோடி வரை வசூலித்து நான் தான் கிங் என்று ரஜினி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.