ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இந்தியாவை சேர்ந்த 19 பேர் இணைந்ததாக தகவல் : மத்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்துகிறது

Published:

இந்தியாவை சேர்ந்த இருந்து 19 பேர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்ததாக தகவல் இந்திய உளவு ஏஜென்ஸிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்டவர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஐ.எஸ். தீவிரவாத பிரச்சாரங்களை தொடர்ந்து பின்தொடர்ந்து வருவதாகவும், அவர்களை இந்திய உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கொடூர தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தியுள்ள நிலையில்,பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இந்திய உளவு ஏஜென்ஸிகள் தெரிவித்துள்ள தகவலில், இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக சென்ற பலர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்திருப்பதாகவும், இந்தியாவில் லஷ்கர்-.இ-தொய்பா தீவிரவாத இயக்கம் தொடர்ந்து அபாயகரமான எதிரியாக இருந்து வரும் நிலையில், தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதமும் இந்தியாவில் பரவி வருவது கவலையளிக்கும் ஒன்றாக மாறியிருப்பதாக கூறியுள்ளது. எனினும், ஐரோப்பாவில் இருக்கும் அளவிற்கு இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் வலுப்பெறவில்லை, இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதம் குறித்த பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை தொடர்ந்து உளவு ஏஜென்ஸிகள் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இந்த தீவிரவாத இயக்கம் எந்த அளவுக்கு வேகமாக வளர்ச்சியடைகிறதோ அதை பொறுத்தே இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதத்தின் நடவடிக்கைகள் இருக்கும் என உளவு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. முன்னதாக, கவுகாத்தியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசுகையில், சில இந்திய இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தால் மூளைச்சலவை செய்யப்பட்டு அதில் இணைந்துவிடுகிறார்கள். அதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டுவிட முடியாது. இதை ஒரு சவாலாகவே இந்தியா கருதுகிறது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img