ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில், இந்திய ராணுவத்தில் ராணுவ கர்ணலாக பணியாற்றும் அதிகாரி ஒருவர் பலியானார் .
இந்திய ராணுவத்தின் 41-வது ராஷ்டீரிய ரைபிள் படையினருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயங்கி வரும் பிரிவினைவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது.
நடைபெற்ற சண்டையில் முன்னின்று நடத்திய கர்ணல் சந்தோஷ்குமார் படுகாயமடைந்தார்.
அவர் உடனடியாக குப்புவாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடார். அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பிரிவினைவாதிகள் குப்புவாரா மாவட்டத்தின் காட்டு பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து இந்த சண்டை நடைபெற்றதாக கூறப்படுகின்றது


