தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் பரவலாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில் வெண்ணந்தூர் பகுதியில் உள்ள ஏரிகள், குளம், குட்டைகள் நிரம்பியதால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் ராசிபுரம் மாவட்டம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியில் உள்ள, சோமூர் ஏரி, 360 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
ஆண்டுதோறும் பெய்யும் மழையால் இந்த ஏரிக்கு அளவிற்கு மேல் மழைநீர் வருவது வழக்கம். தற்போது பெய்த மழையால்ஏரியில் முழு கொள்ளளவையும் ஈட்டி நிரம்பி உபரி நீர் வழிந்தோடுகிறது.
அதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து நெல் மற்றும் கரும்பு பயிர்களை பயிரிட்டு வருகிறார்கள். ஏரியின் கொள்ளளவிற்கு ஏற்ப அந்த பகுதியில், 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் பாசன விவசாயம் தொடர்ந்து நடைபெறும். இங்கிருந்து வெளியேறும் நீர் ராமபுரம், பருத்திப்பள்ளி பகுதிகளில் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் தேங்கி வருகிறது.
மேலும் அக்கரைப்பட்டி ஏரி, மதியம்பட்டி ஏரியும், நிரம்பியுள்ளது. இந்த ஏரிகளுக்கும், சோமூர் ஏரிக்கும் திருமணிமுத்தாற்று பகுதிகளில் இருந்தும் வரும் நீரினால், இந்த இரண்டு ஏரியும் நிரம்பி வருதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


