December 5, 2025, 9:33 PM
26.6 C
Chennai

சிலைத் திருட்டு வழக்கை சிபிஐ.,க்கு மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை : அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

16 June03 high court - 2025

சென்னை: சிலைத் திருட்டு வழக்கை இனி சிபிஐ.,க்கு மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது. மேலும், தமிழகத்தில் கோவில் சிலைகள் காணாமல் போவதை கண்டு கொள்ளாமல், நீதிமன்றம் கண்ணை மூடிக் கொண்டு இருக்க முடியாது எனவும் அது அரசை எச்சரித்துள்ளது.

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கில் சிலைகளைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு அரசு அளித்துவரும் ஒத்துழைப்பு குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் வழக்கறிஞர் உடல்நலக் குறைவு காரணமாக நீதிமன்றத்துக்கு வர இயலாத நிலையில், அறிக்கைகளைத் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்குமாறு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் மனுதாரர்களில் ஒருவரான நரசிம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் இருந்து 13 சிலைகள் திருடு போயிருப்பதாகவும், இது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் முறையிட்டார்.

அவரது முறையீட்டைக் கேட்ட நீதிபதி மகாதேவன், புகார் அளித்த பின்னரும் ஸ்ரீரங்கம் கோவில் சிலைகள் திருட்டு தொடர்பாக நடவடிக்கை எதுவும் ஏன் எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார். கோவில் சிலைகள் மக்களின் நம்பிக்கைக்கு உரியவை என்பதால் அவற்றைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றார் அவர்.

கோவில் சிலைகள் கடத்தப்படுவதைக் கண்டு கொள்ளாமல் நீதிமன்றம் வெறுமனே கண்ணை மூடிக்கொண்டு சும்மா இருக்க முடியாது என்று கூறிய நீதிபதி, நிலைமை இதேபோல் மோசமாகவே தொடருமானால் இந்த வழக்குகளை சிபிஐ.,யிடம் ஒப்படைக்க உத்தரவிட நீதிமன்றம் தயங்காது என எச்சரித்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் மீதான அடுத்த கட்ட விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories