மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் நிகழ்ச்சியால் சென்னை ஆழ்வார்பேட்டை சிக்னல் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கமல் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மற்றும் வேடிக்கை பார்க்க சேர்ந்த கூட்டத்தால் வாகனங்கள் சாலையிலேயே தேங்கி நிற்கின்றன. ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் கட்சியின் கொடியேற்றி வைத்து கமல் உரையாற்றினார்.
அப்போது, மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவராக ஞானசம்பந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.



