TNPL: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் இன்று மோதல்

 

05 July28 Chepak v thoothukuri - 2026டிஎன்பிஎல் டி20ல் தொடர் தோல்வியால் தள்ளாடிக் கொண்டிருக்கும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியுடன் இன்று மோதுகிறது. சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியில் சேப்பாக் அணி முதல் வெற்றியை ஈட்டுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டிஎன்பிஎல் 3வது சீசனில், 18வது போட்டி சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில் முன்னாள் சாம்பியன்கள் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன. டிஎன்பிஎல் முதல் சீசனில் சேப்பாக் – தூத்துக்குடி அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. அதில் சேப்பாக் அணியை 122 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தூத்துக்குடி சாம்பியன் பட்டம் வென்றது.

தொடர்ந்து 2வது சீசனின் இறுதிப்போட்டியிலும் இதே அணிகள் மீண்டும் மோதின. அதில் தூத்துக்குடி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இப்போது நடைபெறும் 3வது சீசனில் இந்த 2 அணிகளும் கடுமையான பின்னடைவை சந்தித்து வருகின்றன. தூத்துக்குடி அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் இருக்கிறது.
தகுதிச்சுற்றுக்கான வாய்ப்பில் தூத்துக்குடி இன்னும் நீடிக்கிறது. ஆனால், எஞ்சியுள்ள 3 போட்டிகளில் கட்டாயம் வென்றால் மட்டுமே அந்த வாய்ப்பு உறுதியாகும். அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் ஒரு போட்டியல் சிறப்பாக விளையாடினால் அடுத்த போட்டியில் சொதப்புகின்றனர்.

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

எனினும் இன்று நடைபெறும் போட்டியில் கவுசிக் காந்தி, சதீஷ், மலோலன் ரங்கராஜன், தினேஷ், அதிசியராஜ் ஆகியோர் அதிரடி காட்டினால் தூத்துக்குடி தகுதிச் சுற்று வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொள்ளும். அதே நேரத்தில் 2முறை இறுதிப்போட்டி, ஒரு முறை சாம்பியன் என்று கடந்த 2 சீசன்களில் கலக்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இந்த முறை தகுதிச் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளது. இனி நடைபெறும் 3 போட்டிகளில் சேப்பாக் அணி வென்றாலும் அது ஆறுதல் வெற்றியாகதான் இருக்கும். இப்படி கடுமையான சூழ்நிலையில்தான் சேப்பாக் அணி இன்று தூத்துக்குடி அணியுடன் மோத உள்ளது.

சொந்த ஊரில் நடைபெறும் போட்டி என்பதால் சேப்பாக் அணி நம்பிக்கையுடன் களமிறங்கும். அணியின் கோபிநாத், அஸ்வின், சசிதேவ், சன்னிகுமார், அருண்குமார் என நட்சத்திர ஆட்டக்காரர்கள் ஏதாவது அதிசயம் நிகழ்த்தினால் சேப்பாக் அணி முதல் வெற்றியை ருசிக்கும். எஞ்சியுள்ள ஆட்டங்கள்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அடுத்து ஜூலை 31ம் தேதி காஞ்சி வீரன்ஸ் அணியையும், ஆக.3ம் தேதி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியையும் சந்திக்க உள்ளது. தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி ஆக.1ம் தேதி திருச்சி வாரியர்ஸ் அணியுடனும், ஆக.5ம் தேதி காரைக்குடி காளை அணியுடனும் மோதுகிறது.

ALSO READ:  தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories