மாநில அரசு வெளிநாட்டில் இருந்து வந்திருப்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று காரைக்குடியில் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், மருத்துவமனை,டீக்கடை, ஓட்டல் வரை பங்களாதேசம், நேபாளத்தை சேர்ந்தவர்கள் பணியில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட கிரானைட் சுரங்கங்களில் அண்டை மாநிலங்களை சேர்ந்த 1.5 லட்சம் பேர் உள்ளனர். அஸ்ஸாம், மேற்கு வங்கம் வழியாக ஊடுருவியவர்கள்.பொறுப்புள்ள நிர்வாகம் இல்லாத காரணத்தால் தமிழகம் மிகப்பெரிய ஆபத்தை சந்தித்து வருகிறது. மாநில அரசு வெளிநாட்டில் இருந்து இங்கு வந்திருப்பவர்களை கணக்கெடுக்க வேண்டும். இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.

