சென்னையில் கம்பன் விழா இன்று தொடக்கம்: சாலமன் பாப்பையாவுக்கு கம்பர் விருது

03 Aug09 Kamban vizha - 2026சென்னையில் 44-ஆவது ஆண்டு கம்பன் விழா இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. விழாவில் பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையாவுக்கு கம்பர் விருது வழங்கப்படுகிறது.

இது குறித்து கம்பன் கழகத்தின் தலைவர் இராம. வீரப்பன், துணைத் தலைவர் ஏவிஎம் சரவணன், செயலாளர் இலக்கிய வீதி இனியவன், இணைச் செயலாளர் சாரதா நம்பி ஆரூரன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கம்பன் கழகத்தின் 44-ஆவது ஆண்டு விழா கம்பனில் மகளிர் மாண்பு’ என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

சாலமன் பாப்பையாவுக்கு விருது: விழாவில் தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டு சாலமன் பாப்பையாவுக்கு கம்பர் விருது, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு பேராசிரியர் கே.சுவாமிநாதன் நினைவுப் பரிசு, பேராசிரியர் வ.ஜெயதேவனுக்கு கம்பன் கழகத்தின் நிறுவனர் நீதிபதி மு.மு.இஸ்மாயில் நினைவுப் பரிசு ஆகியவற்றை வழங்கவுள்ளார்.

இதைத் தொடர்ந்து கலை, இலக்கியத் துறைகளில் புகழுடன் விளங்கும் 16 பேருக்கு பரிசுகளும், மாநில அளவிலான இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். விழாவில் கம்பனில் உணர்ச்சி மேலாண்மை’ என்ற தலைப்பில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு சிறப்புரையாற்றவுள்ளார்.

விழாவின் இரண்டாவது நாளான நாளை காலை 11.30 மணிக்கு சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜ் நடுவராகப் பங்கேற்கும் வழக்காடு மன்றம் நடைபெறும். பிற்பகல் 3 மணிக்கு அமுதக் கடலில் ஆறு துளிகள்’ என்ற தலைப்பில் நெறியாளர் இரா. மாது தலைமையில் நடைபெறும் மாணவர் அரங்கத்தில் 6 மாணவ, மாணவிகள் பங்கேற்றுப் பேசவுள்ளனர். மாலை 5 மணிக்கு கம்பனும் சுவாதித் திருநாளும்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் சாரதா நம்பி ஆரூரன் இசைப் பேருரையாற்றவுள்ளார். மாலை 6 மணிக்கு பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் தலைமையில் பன்மொழிச் சோலை நிகழ்ச்சி நடைபெறும்.

கவிதை முன்னேற்றம்’, மகளிர் மன்றம்’: மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கவிஞர்கள் எஸ்.விஜயகிருஷ்ணன், கண்மணி மைந்தன் ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்கும் கவிதை முற்றம்’, காலை 9.45 மணிக்கு பேராசிரியர் தி.இராசகோபாலனின் காணாதன கண்டேன்’ தலைப்பில் சிறப்புரை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

காலை 11 மணிக்கு விழைந்ததும் விளைந்ததும்’ என்ற தலைப்பில் பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் தலைமையில் மகளிர் மன்றம்’ நடைபெறும். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு கம்பநாடன் கவி’ என்ற தலைப்பில் இலங்கை ஜெயராஜ் சிறப்புரையாற்றுகிறார். மாலை 5 மணிக்கு பேச்சாளர் சுகிசிவம் நடுவராகப் பங்கேற்கும் காப்பிய மாட்சிமையைப் பெரிதும் விளக்கிடும் காட்சிகள்’ என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெறவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories