சென்னையில் கம்பன் விழா இன்று தொடக்கம்: சாலமன் பாப்பையாவுக்கு கம்பர் விருது

03 Aug09 Kamban vizha - 2026சென்னையில் 44-ஆவது ஆண்டு கம்பன் விழா இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. விழாவில் பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையாவுக்கு கம்பர் விருது வழங்கப்படுகிறது.

இது குறித்து கம்பன் கழகத்தின் தலைவர் இராம. வீரப்பன், துணைத் தலைவர் ஏவிஎம் சரவணன், செயலாளர் இலக்கிய வீதி இனியவன், இணைச் செயலாளர் சாரதா நம்பி ஆரூரன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கம்பன் கழகத்தின் 44-ஆவது ஆண்டு விழா கம்பனில் மகளிர் மாண்பு’ என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

சாலமன் பாப்பையாவுக்கு விருது: விழாவில் தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டு சாலமன் பாப்பையாவுக்கு கம்பர் விருது, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு பேராசிரியர் கே.சுவாமிநாதன் நினைவுப் பரிசு, பேராசிரியர் வ.ஜெயதேவனுக்கு கம்பன் கழகத்தின் நிறுவனர் நீதிபதி மு.மு.இஸ்மாயில் நினைவுப் பரிசு ஆகியவற்றை வழங்கவுள்ளார்.

ALSO READ:  குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

இதைத் தொடர்ந்து கலை, இலக்கியத் துறைகளில் புகழுடன் விளங்கும் 16 பேருக்கு பரிசுகளும், மாநில அளவிலான இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். விழாவில் கம்பனில் உணர்ச்சி மேலாண்மை’ என்ற தலைப்பில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு சிறப்புரையாற்றவுள்ளார்.

விழாவின் இரண்டாவது நாளான நாளை காலை 11.30 மணிக்கு சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜ் நடுவராகப் பங்கேற்கும் வழக்காடு மன்றம் நடைபெறும். பிற்பகல் 3 மணிக்கு அமுதக் கடலில் ஆறு துளிகள்’ என்ற தலைப்பில் நெறியாளர் இரா. மாது தலைமையில் நடைபெறும் மாணவர் அரங்கத்தில் 6 மாணவ, மாணவிகள் பங்கேற்றுப் பேசவுள்ளனர். மாலை 5 மணிக்கு கம்பனும் சுவாதித் திருநாளும்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் சாரதா நம்பி ஆரூரன் இசைப் பேருரையாற்றவுள்ளார். மாலை 6 மணிக்கு பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் தலைமையில் பன்மொழிச் சோலை நிகழ்ச்சி நடைபெறும்.

கவிதை முன்னேற்றம்’, மகளிர் மன்றம்’: மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கவிஞர்கள் எஸ்.விஜயகிருஷ்ணன், கண்மணி மைந்தன் ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்கும் கவிதை முற்றம்’, காலை 9.45 மணிக்கு பேராசிரியர் தி.இராசகோபாலனின் காணாதன கண்டேன்’ தலைப்பில் சிறப்புரை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

ALSO READ:  மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

காலை 11 மணிக்கு விழைந்ததும் விளைந்ததும்’ என்ற தலைப்பில் பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் தலைமையில் மகளிர் மன்றம்’ நடைபெறும். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு கம்பநாடன் கவி’ என்ற தலைப்பில் இலங்கை ஜெயராஜ் சிறப்புரையாற்றுகிறார். மாலை 5 மணிக்கு பேச்சாளர் சுகிசிவம் நடுவராகப் பங்கேற்கும் காப்பிய மாட்சிமையைப் பெரிதும் விளக்கிடும் காட்சிகள்’ என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெறவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories