மறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம்

06 Aug21 8 way road - 2026மறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளது.

சென்னை – சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை சட்டவிரோத மானது என அறிவித்து தடை விதிக்கக்கோரி அன்புமணி ராமதாஸ் எம்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் சென்னை சேலம் 8 வழி விரைவு பசுமை சாலை திட்டத்துக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் 2,791 ஹெக்டேர் நிலங்களை அரசு கையகப்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த திட்டத்துக்கு 1,900 ஹெக்டேர் நிலங்களே போதுமானது எனும்போது கூடுதல் நிலங்கள் எதற்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது என் பதை அதிகாரிகள் தெளிவு படுத்தவில்லை. 120 ஹெக்டேர் நிலங்கள் வனப்பகுதியில் கைய கப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி 277.3 கிமீ தூரத்துக்கு அமைக்கப்படவுள்ள இப்பாதையில் 3 குகைப்பாதைகள், 23 பெரிய பாலங்கள், 156 சிறுபாலங்கள், 578 கல்வெட்டுகள், 8 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

இதனால் 10 ஆயிரம் பாசன கிணறுகள், 100 குளங்கள், 6 ஆயிரம் தென்னை மற்றும் பாக்கு மரங்கள் முற்றிலுமாக அழிக்கப்படவுள்ளது. தவிர 1 லட்சத்து 20 ஆயிரம் மரங்கள் வெட்டி சாய்க்கப்படவுள்ளது. 22 கிமீ தூரத்துக்கு அடர்ந்த வனப் பகுதி வழியாக இப்பாதை அமைக்கப்படவுள்ளதால் சுற்றுச் சூழலுக்கும் பேராபத்து ஏற்பட் டுள்ளது. சேர்வராயன், கல்ராயன் என 8 மலைகள் இதனால் பாதிக்கப்படும்.

குறிப்பாக 5 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் சொல்ல முடியாத துயரங்களை அனு பவிக்க நேரிடும். இந்த திட்டத் துக்கு சம்பந்தப்பட்ட மாவட்டங் களைச் சேர்ந்த பொதுமக்களும் விவசாயிகளும் கடும் ஆட் சேப னைகளை தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே சென்னையில் இருந்து சேலம் செல்வதற்கு திண்டிவனம், உளுந்தூர்பேட்டை வழியாக ஒரு பாதையும் காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி வழியாக மற்றொரு பாதையும் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

நிபுணர்கள் குழுவை அமைத்து அந்த 8 வழிச்சாலை திட்டத்தின் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். எனவே எட்டுவழிச்சாலை திட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்து அதற்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே சேலத்துக்கு உள்ள 2 பாதைகளையும் அகலப்படுத்த உத்தரவிட வேண்டும்.

ALSO READ:  தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

இவ்வாறு அதில் கோரியுள்ளார். இந்தமனு விரைவில் விசாரணைக்கு வந்தது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories