பிரணாப் முகர்ஜி இன்று காஞ்சி வருகை

Published:

07 Sep05 Pranab Mukherjee - 2026

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று காஞ்சிபுரத்துக்கு வருகை தரவுள்ளார்.

காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழகத்துக்கு அவர் வருகிறார். அப்போது, பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்டிருக்கும் வகுப்பறைகள், கருத்தரங்குகள், ஆய்வகங்கள் அடங்கிய 4 அடுக்குமாடிக் கட்டடத்தை திறந்து வைக்கவுள்ளார்.

அதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 60 அடியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆதிசங்கரர் சிலையை வணங்குவார். மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு, சங்கர மடத்துக்கு சென்று பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி பெறவுள்ளார்.

Related articles

Recent articles

spot_img