மது விற்பனைக்கு ஏப்ரல் மாதம் முதல் தடை

Published:

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மது விற்பனைக்கு தடை விதிக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தனது அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

1977-78 ஆகிய ஆண்டுகளில் மது விலக்கை அமல்படுத்த முயற்சி செய்தோம். ஆனால், இது பயனளிக்கவில்லை. ஆனால், பெண்கள் மதுவின் கொடுமைகளால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே வரும் நிதியாண்டு முதல் மது விற்பனைக்கு தடை விதிக்க கூடிய பணிகளை துவங்க வேண்டும் எனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான மகா கூட்டணி மெகா வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முன்னதாக, அம்மாநில முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ள நிதிஷ்குமார் நான் ஆட்சிக்கு வந்தால் மது விற்பனைக்கு தடை விதிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். இந்த நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதி மது விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று நிதிஷ் குமார் அறிவித்து இருப்பதால், மாநிலத்தில் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img