புதன், வியாழன் இருநாள் சென்னையில் கனமழை இருக்குமாம்: சொல்வது பிபிசி

சென்னை:

கனமழை பெய்து சென்னையைப் புரட்டிப் போட்டுள்ள நிலையில், அங்கங்கே வெள்ள நீர் ஓரளவு வடிந்து வருகிறது. சென்னை இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. கடந்த 2 நாட்களாக பெரிய அளவில் மழைப் பொழிவு இல்லாமல் இருந்ததால், மீட்புப் பணிகள் தடங்கலின்றி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வரும் டிச.9, 10 இரு தினங்களில் கன மழை சென்னையில் இருக்கும் என்று பிபிசி வானிலை அறிக்கை குறிப்பிடுவது, பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதன், வியாழன் இரு தினங்களில் சென்னையிலும், சுற்றுப் புறங்களிலும் கனத்த மழை பெய்யக்கூடும் என்று பிபிசி வானிலை அறிக்கையின் படம் காட்டுகிறது. இது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது.
இந்நிலையில் இந்த படங்களை மையமாக வைத்து, மழை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நம் செயற்கைக்கோள் படங்களை வைத்து, இன்று இரவுதான் துல்லியமாக கணித்து நாளை கூற முடியும்” என்று சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மீட்புப் பணிகள் பரவலாக நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு, உடை கொடுக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளதால், வீடுகளை சுத்தம் செய்யும் பணிக்காக தங்கள் இருப்பிடங்களுக்கு சிலர் திரும்பியுள்ளனர். மேலும், செம்பரம்பாக்கம் ஏரி நீர் அடையாற்றில் திறந்து விடுவது குறைக்கப் படவில்லை. இந்நிலையில், மேலும் கன மழை பெய்தால், மீண்டும் வெள்ள அபாயம் ஏற்படும் என்று சென்னை வாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Topics

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories