February 24, 2026, 4:02 AM
25.9 C
Chennai

மதுரை அரசு மருத்துவமனை பிரேத அறை ஊழியர் விஜயனின் மனித நேயம்

மருத்துவமனையில் பிரேதங்களை பரிசோதனை செய்யும் பகுதி பக்கம் செல்லவே பெரும்பாலோர் சங்கடப்படுவார்கள்.

இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிரேத அறையில், பிரேதத்தை பரிசோதனை செய்யும் ஊழியர் விஜயன், அவரது 1 மாத சம்பளம் 13 ஆயிரம் மற்றும் வீட்டில் வைத்திருந்த 7 ஆயிரம் ஆக மொத்தம் ரூ. 20 ஆயிரத்தை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்து நேற்று ஒப்படைத்துள்ளார்.

மிக கஷ்டமான வேலையை செய்யும் பிரேத அறை ஊழியர் விஜயனிடம் அவர் வெள்ள நிவாரண நிதி அளித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது கூறியதாவது :-

“தமிழகத்தில் சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் கடும் மழை வெள்ளத்தால் மக்கள் படும் துன்பங்களை பார்த்து என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நானும் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தேன். என்னுடைய குடும்ப உறுப்பினர்களிடம் இந்த மாத வீட்டு செலவை எப்படியாவது சமாளித்து கொள்வோம் என்றும் இந்த மாதத்தின் சம்பளத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொடுக்கப் போகிறேன் என்றும் சொன்னேன். அவர்கள் ஒத்துக் கொண்டார்கள்.
இப்போதுதான் எனக்கு சம்பளம் ரூ.13 ஆயிரம் வந்தது.

எனது மகள் சேமித்து வைத்து கொடுத்த பணத்தையும் சேர்த்து ரூ. 20 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்து கொடுத்துள்ளேன்” என மனிதநேயம் கொண்ட பிரேத அறை ஊழியர் விஜயன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததார் .

மக்களின் வரிப் பணத்தில் தமிழக அரசாங்கம் பொதுமக்களுக்கான அனைத்து நலத்திட்ட உதவிகளுக்காக செலவிட பெரும் தொகையை ஒதுக்குகிறது.

அவ்வாறு ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய்களை பெரும்பாலான அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகள் பொதுநல நோக்கம் இன்றி லஞ்சம் பெற்றும் ஊழல் செய்தும், பொதுமக்களின் வரிப் பணத்தை பொதுநல திட்டங்களுக்கு முறையாக செலவிடாமல் கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் பேராசையில் தொடர்ந்து சுற்றி திரிந்து வரும் சுயநல அரசியல்வாதி கரைவேட்டி கொள்ளையர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மனமின்றி உள்ளனர்

இந்த நிலையில் தற்போது சென்னை மீளக் காரணம் அரசியல் போன்று எவ்விதமான இலவச சுய விளம்பரமும் தேடிக் கொள்ள ஆசைப்படாமல் இன, மத, மொழி, நிற வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு மனித நேயத்துடன் உதவிக்கரம் கொடுத்த தனியார் அமைப்புகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் மனிதநேயம் கொண்ட தனி மனிதர்களும்தான் என்றால் மிகையல்ல.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு மனித நேயத்துடன் உதவிக் கரம் கொடுத்த, கொடுத்துக் கொண்டுள்ள அனைவருக்கும் தினசரி இணைய தமிழ்ச் செய்தித் தளம் நிறுவனம் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Entertainment News

Popular Categories