கூடுதல் விலை வைத்து விற்பதை தடுக்க டாஸ்மாக்கடைகளில் இனி ஸ்வைப்பிங்மெஷின் வரும் டிசம்பர் இறுதிக்குள் அமல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டம் சென்னையில் அடுத்த மாதமும், அதைத் தொடர்நது மற்ற மாவட்டங்களி்லும் டிசம்பர் இறுதிக்குள் நடைமுறைக்கு வருகிறது. ‘ஸ்வைப்பிங் மெஷின்களை’ பயன்படுத்த விற்பனையாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே, கடைகளில் பயன்படுத்தப்படும் பில்லிங் நடைமுறையில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு இருக்கிறது.
மேலும், டாஸ்மாக் கடைகளில் கொள்ளையும் நடைபெறுகிறது. இதை தடுக்கும் விதமாகவும், கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் நடவடிக்கையை தடுக்கும் விதமாகவும் இதை நடைமுறைப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.