ஆந்திரா பாடகர்களின் தமிழக மழை வெள்ளம் பற்றிய கண்ணீரை வரவழைக்கும் இசைப் பாடல் காணொளி

Published:

 
 
 
சிம்பு அனிருத்தின் “அந்தப்” பீப்.. பீப்.. பாடல் வெளியான அதே நாளில் தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்துக்காக அர்பணித்து அண்டை மாநிலமான ஆந்திராவில் பாடகர்கள் அனைவரும் உணர்ச்சி கொப்பளிக்க ஒருமித்து பாடி நம் இதயம் உடைத்து கண்ணீரை வரவழைக்கும் இசைப் பாடல் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவருகிறது .
 
ஆந்திரா பாடகர்களின் தெலுங்கு இசைப் பாடல் வரிகளின்  தமிழாக்கம் :
 
இவைகள் தண்ணீரா இல்லை கண்ணீர் துளிகளா? நம்மை மூழ்கடிக்கும்போது இதை எப்படி எதிர்கொள்வது?
நீர் மேலிருந்து கீழ்வரை முழுங்கிவிடுவேன் எனச் சொல்லும்போது எப்படி எதிர்கொள்வது?
உயிர்கள் எல்லாம் இழக்கப்படும்போது சப்தமின்றி (நமக்கு நாமே) சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோமா?
இறந்தவர்களுக்கான தீ மூட்டலினால் மனதில் ஏற்படும் பாரத்தை சுமந்துகொண்டு சூனியத்தை திட்டிக்கொண்டிருக்கப்போகிறோமா?
அடிக்கும் பேய்மழையில் ஏற்பட்ட கோபத்தை தொண்டைவரை வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?
ஒவ்வொருகணமும் நீரில் மூழ்கி பெருந்துயரில் இருக்கும் மக்களுக்கு உங்கள் ஆக்ரோஷம் மட்டும் இருக்கும் நிலையை மாற்றிவிடுமா?
 
மனிதனுக்கு மனிதனாக உடன் வாருங்கள்..
மனது வைத்து (எல்லோரும்) வாருங்கள்,
இதைப் பார்க்கும் பேரழிவும் (நம்மைப்பார்த்தால்) பாவமாக உணரும்.
 
உயிர்களின் மதிப்பு உங்களுக்கு தெரிந்து (இந்த அழிவைக்கண்டு) ரத்தம் கொதிக்கும் நிலையில், நீங்கள் உங்கள் கையைக் கொடுக்க மாட்டீர்களா?
 
ஒவ்வொரு கணத்தையும் ஒரு யுகமாகக் கழிக்கும் உதவிக்காக காத்திருக்கும் மக்களின் குரல் கேட்கவில்லையா?
 
இரவும் பகலுமாக இருட்டும் கஷ்டமுமாக இருக்கும் இவர்களுக்கு கஷ்டத்தை நீக்க விளக்காக நீங்கள் வாருங்கள்.
அவர்களை உயிர்ப்புடன் வைத்திருங்கள்.
அவர்களுக்கு சுவாசம் தாருங்கள்.
கோரமான வெள்ளத்தில் நசுக்கப்பட்டோருக்கு உதவச் செல்கையில் அவர்களுக்கு மகிழ்ச்சியையும், அன்பையும் தருவோம்.
 
கண்களில் கடல் போன்ற நீருடன் நகர தெருக்களில் பசியால் அலறும் சப்தம் உனக்கு கேட்கவில்லையா?
நம்பிக்கையையே அழித்துவிட்ட வெள்ளத்திலிருந்து உதவி கோரி அழைப்பதை நீ பார்க்கவில்லையா? குழந்தைகளின் எதிர்காலம் பாழாகாமல் பார்த்துக்கொள்ளும் உன் பொறுப்பை நீ செய்.
இருளே கவிழ்ந்தாலும் திசைகள் மாறுவதில்லை, (பாதிக்கப்பட்டோருக்கு) வருடும் நம்பிக்கையாய் நீ அத்திசையை நோக்கி எழு.
 
மனிதன் மனிதனுக்கு உதவி.
மனிதன் மனிதனுக்கு தைரியம்.
மனிதர்கள் ஒன்றாக இணைந்திருந்தால் கடவுள் (நமக்காக) கீழிறங்க மாட்டாரா?
நான் அல்ல, நாம் என்று நாம் அனைவரும் ஒன்றென்று உதவி தேவைப்படுபவனுக்காக (பிறருடன் கைகோர்த்து) ஒன்றினைந்து நடக்கும் ஒருவன் வெறும் மனிதனல்ல, அவன் தெய்வம்.
சினிமா நட்சத்திரங்களுக்கும் நம்மைப்போலவே மனது உண்டு, அவர்களும் கஷ்டத்தை உணர்ந்திருக்கிறார்கள்.
சினிமா நட்சத்திரங்களும் நீயும் நானும் ஒன்றே, நாம் என்றே சொல்லி ஆதரவுக்கு சேர்ந்து நிற்கின்றனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் தொழில் செய்வோரும், கற்றவர்களும் கொடையாளிகளாக இன்று உருமாறி இருக்கின்றனர். உங்களின் சிறு கொடையும் நமது உதவியை அன்புடன் செய்ய இயலும்.
 
அடிக்கும் பேய்மழையில் ஏற்பட்ட கோபத்தை தொண்டைவரை வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?
ஒவ்வொருகணமும் நீரில் மூழ்கி பெருந்துயரில் இருக்கும் மக்களுக்கு உங்கள் ஆக்ரோஷம் மட்டும் இருக்கும் நிலையை மாற்றிவிடுமா?
 
மனிதனுக்கு மனிதனாக உடன் வாருங்கள்..
மனது வைத்து (எல்லோரும்) வாருங்கள்,
இதைப் பார்க்கும் பேரழிவும் (நம்மைப்பார்த்தால்) பாவமாக உணரும்.
உயிர்களின் மதிப்பு உங்களுக்கு தெரிந்து (இந்த அழிவைக்கண்டு) ரத்தம் கொதிக்கும் நிலையில், நீங்கள் உங்கள் கையைக்கொடுக்க மாட்டீர்களா? என்று அந்த இசைப் பாடல் முடிகிறது .
 
இசைப் பாடல் வரிகளின் தமிழாக்கம் :-
ஜெயக்குமார் ஸ்ரீநிவாசன், தினசரி இணைய தமிழ்ச் செய்தித் தளத்தின் வாசகர்
 
 
ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img