கனமழையால் உயிரிழந்த 25 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் உத்தரவு

சென்னை:

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்த 25 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பெய்த கன மழையினால் சென்னை, எழும்பூர் வட்டம், கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் ரவிக்குமார்; காஞ்சீபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், வேளூர் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் பாக்கியராஜ்; ஆலந்தூர் வட்டம், நந்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனின் மனைவி சுசீலா; மகள் விஜயலட்சுமி மற்றும் மகன் வெங்கடேஷ். சென்னை, மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் தயாளன்; புரசைவாக்கம் வட்டம், ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பலராமன் மகன் லட்சுமிபதி; கிண்டி வட்டம், ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்த பாலசந்திரனின் மனைவி சங்கராந்தி மற்றும் மகன் சீனிவாஸ்; விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், ஏமப்பேர் கிராமத்தைச் சேர்ந்த காமதேனு மகன் பிரபு; காஞ்சீபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், பெரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சாமிநாதன்; கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கெல்லன் மகன் சின்னத்தம்பி. திருப்போரூர் வட்டம், சிறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனின் மனைவி சரஸ்வதி; மதுராந்தகம் வட்டம், கெண்டரைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மகன் நொச்சிலி; சென்னை, மயிலாப்பூர், கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த மாரி மகன் பாஸ்கர்; தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்தையாவின் மனைவி கிருஷ்ணம்மாள்; திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், புங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் பரசுராமன் ஆகியோர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், மகனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்த கவுண்டர் மகன் பெரியதம்பி; விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வடகுச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பரந்தாமன் மகன் அகிலன்; மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி மகன் சசிக்குமார்; திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், காரங்காடு கிராமத்தைச் சேர்ந்த பிறவிப் பெருமாள் மகன் ஆறுமுக நயினார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், முத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டையன் மகன் முனியன் ஆகியோர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.

ALSO READ:  இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், ஈச்சங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி மாரியம்மாள்; விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், செம்பொன் நெறிஞ்சி கிராமத்தைச் சேர்ந்த மூக்கையா மகன் பழமுதிர்சோலை; திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், வேலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் செல்வம் ஆகியோர் மழையின் காரணமாக மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர்.

இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
– என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories