கனமழையால் உயிரிழந்த 25 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் உத்தரவு

சென்னை:

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்த 25 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பெய்த கன மழையினால் சென்னை, எழும்பூர் வட்டம், கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் ரவிக்குமார்; காஞ்சீபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், வேளூர் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் பாக்கியராஜ்; ஆலந்தூர் வட்டம், நந்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனின் மனைவி சுசீலா; மகள் விஜயலட்சுமி மற்றும் மகன் வெங்கடேஷ். சென்னை, மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் தயாளன்; புரசைவாக்கம் வட்டம், ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பலராமன் மகன் லட்சுமிபதி; கிண்டி வட்டம், ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்த பாலசந்திரனின் மனைவி சங்கராந்தி மற்றும் மகன் சீனிவாஸ்; விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், ஏமப்பேர் கிராமத்தைச் சேர்ந்த காமதேனு மகன் பிரபு; காஞ்சீபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், பெரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சாமிநாதன்; கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கெல்லன் மகன் சின்னத்தம்பி. திருப்போரூர் வட்டம், சிறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனின் மனைவி சரஸ்வதி; மதுராந்தகம் வட்டம், கெண்டரைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மகன் நொச்சிலி; சென்னை, மயிலாப்பூர், கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த மாரி மகன் பாஸ்கர்; தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்தையாவின் மனைவி கிருஷ்ணம்மாள்; திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், புங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் பரசுராமன் ஆகியோர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், மகனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்த கவுண்டர் மகன் பெரியதம்பி; விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வடகுச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பரந்தாமன் மகன் அகிலன்; மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி மகன் சசிக்குமார்; திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், காரங்காடு கிராமத்தைச் சேர்ந்த பிறவிப் பெருமாள் மகன் ஆறுமுக நயினார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், முத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டையன் மகன் முனியன் ஆகியோர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், ஈச்சங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி மாரியம்மாள்; விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், செம்பொன் நெறிஞ்சி கிராமத்தைச் சேர்ந்த மூக்கையா மகன் பழமுதிர்சோலை; திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், வேலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் செல்வம் ஆகியோர் மழையின் காரணமாக மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர்.

இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
– என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

Entertainment News

Popular Categories