தமிழகத்தின் அனைத்து அணைகள், ஏரிகளிலிருந்து கூட தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டவர் ஜெயலலிதா : விஜயகாந்த்

Published:

 
 
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
 
தமிழக தலைமைச் செயலாளர் கொடுத்துள்ள விளக்கத்தில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு பொதுப்பணித்துறையின் உதவி செயற்பொறியாளருக்கே முழு அதிகாரம் உள்ளதென்றும், முதலமைச்சருக்கு எந்த தொடர்பும் இல்லையென பொருள்படும்படி கூறியுள்ளார். ஆனால் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதிலிருந்து நேற்று வரை, தமிழகத்தின் அனைத்து அணைகள், ஏரிகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவதென்றால் கூட அவர் தான் உத்தரவிட்டுள்ளார்.
 
வாட்ஸ் அப் உரையில் மக்களின் துன்பங்களுக்கு அரசு என்ன செய்யபோகிறது என்பதை பற்றி கூறாமல், தான் ஒருவர் தான் மக்களை காப்பாற்ற பிறந்தவர் போல பேசியுள்ளார். இப்படியெல்லாம் பேசி மக்களை ஏமாற்றியது போதும், இனியும் தமிழக மக்கள் ஏமாற தயாராக இல்லை. இனியாவது தமிழக மக்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவே நேரடியாக பதிலளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
 
என்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
 
 
ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img