இசையமைப்பாளர் இளையராஜா அறிவு இருக்கா ? என செய்தியாளரிடம் அநாகரீகமாக பேசி வாக்குவாதம்

 
 
இசையமைப்பாளர் இளையராஜா அறிவு இருக்கா ? என அநாகரீகமான வார்த்தையை பயன்படுத்தி செய்தியாளரை தரக்குறைவாக பேசி வாக்குவாதம் செய்ததால் அதற்க்கு ஊடகவியலாளர்கள் கண்டம் தெரிவித்துள்ளனர்.
 
சென்னையில், கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட இளையராஜாவிடம், தற்போது சர்சையை கிளப்பியுள்ள சிம்பு, அனிரூத்தின் “பீப் சாங்” குறித்து கருத்து கேட்டுள்ளார் தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் ஆனந்த்.
 
இதற்கு அந்த செய்தியாளரை பார்த்து “என்னை கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதியுள்ளது” உனக்கு அறிவு இருக்கா ? என்று அநாகரீகமான வார்த்தையை பயன்படுத்தி மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார் இளையராஜா.
 
இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்து, நடகர் சிம்புவால் பாடப்பட்ட “பீப் சாங்”, பெண்களை மிக கேவலமாக சித்தரித்துள்ளதால், அனிரூத் மற்றும் சிம்புவை கைது செய்ய வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக சிம்புவும், அனிரூத்தும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கோவை மாநகர காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இந்நிலையில், திரைப்படத்துறையில் இசையமைப்பாளர் ஒருவரின் செயலால் தற்போது எழுந்துள்ள சர்சை குறித்து, செய்தியாளர் இளையராஜாவிடம் கருத்து கேட்டதில் என்ன தவறுள்ளது? அந்த கேள்விக்கு பதிலளிக் விருப்பமில்லையென்றால் அதை இளையராஜா வெளிப்படையாக தெரிவித்திருக்கலாமே?
 
அதைவிடுத்து, சமூகத்தில் அனைவராலும் மதிக்கத்தக்க இடத்தில் உள்ள இளையராஜா, கேள்விகேட்ட செய்தியாளரை பொறுப்பில்லாமல் மிகவும் தரக்குறைவாக பேசியது, தமிழ் சமூகம் அவருக்கு வழங்கியுள்ள அங்கீகாரத்தை உதாசினப்படுத்தும் செயல் என்றே மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் கருதுகின்றன்றனர்.
 
சம்பந்தப்பட்ட நபர்களிடம், துணிச்சலாக கேள்விகளை முன் வைப்பதன் மூலம், மக்களின் வாழ்நிலையை மாற்றக்கூடிய நிகழ்வுகளையும், அதற்குப்பின்னால் உள்ள அரசியலையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது செய்தியாளர்களின் சமூக கடமையாகும்.
 
அந்தவகையில், கேள்விகேட்ட செய்தியாளரை என்று அநாகரீகமான வார்த்தையை பயன்படுத்தி மிகவும் தரக்குறைவாக பேசிய இசையமைப்பாளர் இளையராஜாவின் செயலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கின்றது. அத்துடன், தனது செயலுக்காக இளையராஜா வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
 
மக்கள் கொடுக்கும் அங்கீகாரமே, ஒருவனுக்கு கலைஞன் என்ற அந்தஸ்தை வழங்குகின்றது. அவ்வாறு, மக்களால் போற்றப்படும் கலைஞர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும் என்பதை இந்தநேரத்தில் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories