தி.மு.க. செல்வாக்கை இழந்து வருகிறதா? : கருணாநிதி

 
 
தி.மு.க. செல்வாக்கை இழந்து வருகிறது என்று வைகோ தெரிவித்த கருத்துக்கு, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை வைகோ உணரவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கருணாநிதி கூறியுள்ளார்.
 
கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
 
நால்வர் அணி
 
கேள்வி:- தற்போதைய மழைநீர் வெள்ளப் பிரச்சினைக்கு ஒரு சிலர் தி.மு.க. ஆட்சியையும் சேர்த்துக் குறைசொல்கிறார்களே?. குறிப்பாக “நால்வர்” அணியைச் சேர்ந்த ராமகிருஷ்ணனே சொல்லியிருக்கிறாரே?.
 
பதில்:- தி.மு.க.வை பிடிக்காதவர்கள் வேண்டுமென்றே சாட்டுகின்ற குற்றச்சாட்டு இது. அ.தி.மு.க. அரசு தி.மு.க. ஆட்சியின் பல திட்டங்களுக்கு மூடு விழா நடத்தியதன் விளைவுதான் சென்னை பாதிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமே தவிர, தி.மு.க. ஆட்சி மீது எந்தத்தவறும் சொல்ல முகாந்திரம் சிறிதும் இல்லை. எனினும் அ.தி.மு.க. அரசை நேரடியாக விமர்சிக்க அஞ்சுபவர்கள், தி.மு.க.வை விமர்சித்து விட்டு அதன் தொடர்ச்சியாகவே அ.தி.மு.க.வை விமர்சிக்கிறார்கள். அவர்களுடைய உள்நோக்கமும் கபட வேடமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்து வருகிறது. நால்வர் அணியின் கருத்துகளுக்கு இதுவரை நான் பதிலளிக்காமல் தான் இருந்தேன். ஆனால் குட்ட குட்ட குனிந்து கொண்டிருப்பது சரியல்ல அல்லவா?.
 
அ.தி.மு.க. அனுதாபி
 
கேள்வி:- சென்னைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டது தொடர்பாக ஆசிரியர்களைக் கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்களே?.
 
பதில்:- சில மாதங்களுக்கு முன்பு கூட மாணவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பேராசிரியர் ஒருவரைப் பணியில் இருந்து துணைவேந்தர் நீக்கி, அதனால் மாணவர்கள் போராடக்கூடிய நிலைமை ஏற்பட்டது. இப்போதும் தாக்கப்பட்ட மாணவர் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்படலாம் என்றும் செய்திவந்துள்ளது. பல்கலைக்கழகத் துணை வேந்தராக, அ.தி.மு.க. அனுதாபி ஒருவரை நியமித்ததன் காரணமாகவே பிரச்சினைகள் எழுவதாகக் கூறப்படுகிறது. பல்கலைக்கழகங்கள் அரசியல் நோக்கத்தோடு நடந்து கொள்ளாமல் மாணவர்களின் கல்வியோடு நிறுத்திக்கொள்வதுதான் நல்லது.
 
நிதி சுமை ரத்து?
 
கேள்வி:- பெட்ரோல், டீசலுக்கு திடீர் என வரி உயர்வு செய்யப்பட்டிருக்கிறதே?.
 
பதில்:- பெட்ரோல், டீசலுக்கு விலை குறைக்கப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை முதல் நாள் ஏற்படுத்திவிட்டு, அடுத்த நாள் பெட்ரோல் லிட்டருக்கு 30 பைசாவும், டீசல் லிட்டருக்கு 1.17 பைசாவும் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இது தேவையற்ற ஒன்றாகும். எனவே, மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமார் 2,500 கோடி ரூபாய் நிதிச் சுமையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
 
மக்கள் நினைப்பதை…
 
கேள்வி:- ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “எங்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது, இன்றைக்கு மக்கள் மத்தியில் தி.மு.க. செல்வாக்கு இழந்து வருகிறது” என்று கூறியிருக்கிறாரே?.
 
பதில்:- “வைகோ”வைப் பொறுத்தவரையில் அவரை நான் நன்கறிவேன். நல்ல பேச்சாளர், ஆனால் நாட்டிலே என்ன நடக்கிறது, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அவருடைய கட்சியில் இருந்து வரிசையாக மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் விலகி, தி.மு.க.விலே தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் வைகோ அவருடைய கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாகவும், தி.மு.க. செல்வாக்கை இழந்து வருவதாகவும் கூறுகிறார் என்றால் அவரைப்பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள்?. அதுமாத்திரமல்ல; அவருடைய கட்சியினரை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தான் ஏதோ வலியுறுத்தி அழைத்து வருவதைப் போலவும், எனக்குத் தெரியாமல் அந்தச் சம்பவங்கள் நடைபெறுவதைப் போலவும் வைகோ பேட்டியில் கூறியிருக்கிறார்.
 
அதுவும் தவறான எண்ணம். எனக்குத் தெரியாமல், தி.மு.க.வில், இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு வாய்ப்பில்லை என்பதை அனுபவத்தின் அடிப்படையில் வைகோ அறிவார். அரசியலில் நாகரிகம் இல்லாமல், ம.தி.மு.க. நண்பர்களை தி.மு.க.வில் கட்சித் தலைமை இணைத்துக் கொள்வதாகவும் வைகோ பேட்டியளித்திருக்கிறார்.
 
ஒரு கட்சியில் இருந்து விலகி வருபவர்களை, மற்றொரு கட்சியிலே இணைத்துக் கொள்வது அரசியல் நாகரீகமற்ற செயல் அல்ல. வைகோ உள்ளிட்ட அனைவருமே தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று இணைந்து கொண்டதுதானே ம.தி.மு.க. அது மட்டும்தான் நனி நாகரிகமா?. என்று
கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories