வைரமுத்துவை ஆரம்பத்திலேயே அடக்கி வைத்திருக்கணும்…: இப்போது சொல்பவர் ஏ.ஆர்.ரஹானா

ar reihana speaks about chinmayis allegation vairamuthu - 2026

சென்னை: வைரமுத்துவைக் குறித்து திரைத் துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும்; அவரை, ஆரம்பத்திலேயே அடக்கி வைத்திருக்க வேண்டும் என பிரச்னைகள் பூதாகாரமாக வெடித்த பின்னர், ஆரம்பத்திலேயே சொல்லாமல் இப்போது சொல்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா.

வைரமுத்து குறித்த சர்ச்சையை பாடகி சின்மயி கிளப்பிய பின்னர், ஒவ்வொருவராக புகார்களைத் தெரிவிக்கத் தொடங்கினர். இந்நிலையில், சின்மயி விவகாரம் குறித்து தனியார் டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்தார் ஏ.ஆர்.ரகுமானின் தங்கை ஏ.ஆர்.ரஹானா.

காரணம், வைரமுத்து பாடகிகள் பலரையும் ஆசை காட்டி அருகே வர வைத்ததும், பின்னர் வாய்ப்பு கிடைக்காமல் செய்து விடுவேன் என்று பிளாக் மெயில் செய்ததும் ஏ.ஆர்.ரகுமானின் பெயரைப் பயன்படுத்திதான்! ஏ.ஆர்.ரகுமானிடம் உன்னை அறிமுகப் படுத்துகிறேன், உனக்கு வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று கூறி மடக்கியுள்ளார் என்பதால், வெகுகாலமாகவே அவரது இந்த ப்ளாக் மெயில் விவகாரம் சினிமா உலகில் பேசப்பட்டுதான் வந்துள்ளது. அந்த அளவுக்கு ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான படங்களுக்கு வைரமுத்து பாடல்களை ஒட்டுமொத்தமாக எழுதியிருக்கிறார் என்று சுட்டிக் காட்டுகிறார்கள் சக கவிஞர்கள்.

இந்நிலையில் இசையமைப்பாளரும் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரியுமான ரஹானா இதுகுறித்துக் கூறியபோது, பாடகி சின்மயி கூறியதை நான் நம்புகிறேன். ஆனால் 15 ஆண்டுகள் கழித்து அவர் பேசுவது தான் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது. கோபம் என்றால் அன்றே வெளிப் படுத்தி இருக்க வேண்டும். வைரமுத்து பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக சின்மயி புகார் கூறவில்லை. வைரமுத்து குறித்த பல விஷயங்களை கேள்விப்பட்டுள்ளேன். பெண்கள் பலர் அவரைப் பற்றி என்னிடம் கூறியுள்ளனர். அவர் எப்படிப்பட்டவர் என்பது திரைத்துறையில் உள்ள அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

வைரமுத்துவை ஆரம்பத்திலேயே அடக்கி வைத்திருக்க வேண்டும். இந்த அளவுக்கு வளர விட்ட பிறகு கூறக் கூடாது. வைரமுத்துவை மட்டும் ஏன் டார்கெட் செய்ய வேண்டும்?! மற்ற பாடகர்கள் மீது எழுந்த புகார்களையும் விசாரிக்க வேண்டும். வைரமுத்து விவகாரம் குறித்து ரகுமானுக்கு தெரியாது. அவர் கிசுகிசுக்களில் இருந்து தள்ளியே இருப்பார்” என்று, தனக்கு முன்னமேயே தெரிந்திருந்தும், பலர் கூறியிருந்தும், அப்போதே வெளிப்படுத்தாமல்,அப்போதே ரகுமானிடம் இது குறித்து எச்சரிக்கை செய்யாமல், அல்லது விஷயத்தைத் தெரியப் படுத்தாமல், இப்போது பிரச்னை பெரிதான நிலையில், அதுவும் டிவி.,யில் பேட்டி என்று அழைத்துக் கேட்டபோது வெளிப்படுத்தியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹானா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories