மழை வெள்ளத்தில் பலியான 15 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் : முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

Published:

 
 
வடகிழக்கு பருவ மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்கு பலியான 15 பேரின் குடும்பத்தினருக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 4 லட்சம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது :-
 
வடகிழக்கு பருவ மழை காரணமாக கடந்த 2-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கனகம்மாசத்திரம் கோட்டீஸ்வரன், பட்டாபிராம் ஜெயந்தி, பூங்கொடி, சந்தியா, அத்திப்பட்டு புதுநகர் ஜெகநாதன், 3-ம் தேதி வேம்பேடு மனோகரன், 4-ம் தேதி விடையூர் பழனி, இருளஞ்சேரி அன்புச்செல்வன், தண்டுரை பட்டாபிராம் யுவராஜ், மணிவண்ணன், மணலிபுதுநகர் தினகரன், 5-ம் தேதி காட்டூர் சுந்தரமூர்த்தி ஆகியோர் மழை, வெள்ளத்தால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
 
கடந்த 3-ம் தேதி வேப்பம்பட்டு காசி, 6-ம் தேதி மோவூர் மகாலிங்கம், பிரியாங்குப்பம் மணி ஆகியோர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததாலும் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.
 
உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினருக்கும் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 4 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியு்ள்ளார்.
ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img