ஆலய சொத்து விவரத்தை இணையத்தில் வெளியிட அறநிலையத்துறைக்கு உத்தரவு! முதல் வெற்றி என்கிறார் ஹெச்.ராஜா!

srirangam temple jeyaraman2 - 2026

அறநிலையத் துறை ஆலயங்களின் சொத்து விவரத்தை இணைய தளத்தில் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை வரவேற்றுள்ள பாஜக. தேசிய செயலர் ஹெச்.ராஜா, இது தங்களது கோரிக்கைகளுக்குக் கிடைத்த முதல் வெற்றி என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அறநிலையத்துறை இந்து கோவில்கள் சொத்துக்களின் விவரங்கள் அறநிலையத்துறை இணையத்தில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. குத்தகைதார்கள் பெயர், குத்தகை பாக்கி ஆகிய விவரங்களும், ஆக்கிரமிப்பாளர்கள் பெயர் ஆகியவற்றையும் வெளியிட உத்தரவு. நம் கோரிக்கையின் முதல் வெற்றி… என்று குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னர் இதே போல் அறநிலையத்துறை ஆலய சொத்துகளை நெடுங்கால குத்தகைகளுக்குப் பெற்றவர்கள், குத்தகைகளை செலுத்தாமல் பாக்கிவைத்திருப்பதும், உள்வாடகைக்கு விடுவதுமான முறைகேடுகளில் ஈடுபட்டிருந்த போது, கோயில்களில் குத்தகை பாக்கிதாரர்கள் குறித்து எழுதி வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவு வந்தது. ஆலயங்களில் மண்டப வெளியில் பட்டும் படாமலும் சிலரின் பெயர்களை எழுதி வைத்தார்கள். ஆனால் அவற்றால் எல்லாம் குத்தகை பாக்கி வசூலானதாகத் தெரியவில்லை.

குத்தகை பாக்கி வைத்திருப்பவர் தங்களது பெயர் வெளித் தெரிந்தால், அதற்காக வெட்கப்பட்டு வேதனைப்பட்டு கேவலப்பட்டு, நாணத்தால் கூசிக் குறுகி நின்றதெல்லாம் அந்தக் காலம். இப்போதோ காலரை தூக்கி விட்டுக் கொண்டு, கெத்தாகத் திரிகிறார்கள். இந்த நிலையில், வெறுமனே குத்தகை விவரம், பாக்கி, வசூல் விவரம் இவை எல்லாம் இணையதளங்களில் வெளியிடுவதால் மட்டும் பலன் விளைந்துவிடாது என்றும், வசூல் செய்வதில் கறார் காட்டுவதால் மட்டுமே ஆலய சொத்துகள் பாதுகாக்கப் படும் என்றும் கூறுகின்றனர் ஆலய பாதுகாப்பு குறித்து பேசுபவர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories