ஒட்டன்சத்திரம் அருகே இரு கார்கள் மோதி விபத்து: 5 பேர் பலி

Published:

திண்டுக்கல்:

ஒட்டன்சத்திரம் அருகே இரண்டு கார்கள் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணி (40). இவரது மனைவி (35). இவர்களின் குழந்தைகள் அஞ்சலி (3), அஞ்சனா (2). இந்நால்வரும் கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.
திருப்பூரில் இருந்து சிவகாசி நோக்கி சுப்பிரமணியன் (60) அவரது மனைவி ருக்மிணி (57) அவரது மகன் மணிகண்டன் (32) மனைவி ராதா, இரண்டு குழந்தைகளுடன் காரில் வந்து கொண்டிருந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அம்ளிகை என்ற இடத்தில் இரு கார்களும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் சுப்பிரமணியம், ருக்மிணி, மணிகண்டன், ராதா, சிவசுப்பிரமணி ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 5 பேர் காயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து, சம்பவ இடத்துக்கு வந்த அம்ளிகை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

Related articles

Recent articles

spot_img