அரசியல்வாதிகளிடம் உங்கள் வீரத்தை காண்பியுங்கள்!

Published:

 

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், தன் நிலை மறந்து பொது இடங்களில் நடந்து கொள்கிறார். ஊடகவியலாளர்களிடம் அவர் அநாகரிகமாக நடந்து கொள்வது தொடர்கதையாகி  காரித் துப்பும் அளவுக்கு, அவருக்கு துணிச்சல் வந்துள்ளது என  இந்தியாவின் பல்வேறு ஊடக அமைப்புகள் ஒன்று திரண்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பெரும்பாலோர் விஜயகாந்த் ஊடகவியலாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது சரியானது என்றே தொடர்ந்து பதிவினை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விஜயகாந்த்துக்கு அதரவாக பதிவிட்ட பதிவில் விஷ்வா விஸ்வநாத் என்பவரின் கருத்து என சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவரும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-

ஊடகத்தை குறை சொல்லிக்கொண்டு திரியும் கொண்டையை மறைக்கக் தெரியாத ஒரு பேஸ்புக் ஐடியின் கருத்துக்கு விஷ்வா விஸ்வநாத் அளித்த பதில் இது…

(யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல )
” வோட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகளிடம் இதே போல உங்கள் வீரத்தை காண்பியுங்கள். அவர்களிடம் கேட்க வக்கில்லாத, அவர்கள் கொடுக்கும் இலவச பொருட்களை வாங்கிக்கொண்டு வாக்களிக்கும் செயல்பாட்டை நிறுத்திவிட்டு என்னைப் போன்றவர்களுக்கு அறிவுரை கூறுங்கள் .

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

என் வீட்டில் எந்த இலவச பொருளும் இல்லை. எனக்கு சான்றளிக்கும் வேலையை ஒதுக்கி வைத்து விட்டு உங்கள் அரசியல் தலைவர்களுக்கு ரேட்டிங் போடுங்க முதலில். ஜனநாயககடமை ஆற்றும் பொறுப்பும் உங்களைப் போன்ற பொதுஜனத்திற்கு தேவை. அதை முதலில் செய்யுங்கள். ஊடகங்கள்உங்கள் அடிமைகள் அல்ல. உங்கள் வரிப்பணத்தில் வயிறு
வளர்ப்பவர்கள் அல்ல நாங்கள். நீங்கள் ஆதரிக்கும் அரசியல்வாதிகள் தான் வரிப்பணத்தில் வயிறு வளர்க்கிறார்கள்.

எங்களை விமர்சிக்கும் அதே வேகத்தில் அரசியல்வாதிகளைவிமர்சியுங்கள். இவ்வளவு தம் கட்டி என்னிடம் நீங்கள் பேசிக்கொண்டுஇருப்பதின் நோக்கம் என்ன. ? உண்மையான தேச சேவை என்றால் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்கிறேன். அனால், இத்தனை நாளாக இல்லாமல் இப்போது நீங்கள் ஊடகத்தின் மீது பொங்க வேண்டிய அவசியம் என்ன ? உங்கள் பின்புலம் என்ன ?

உங்களைபற்றி முதலில் இதே தளத்தில் அறிமுகம் செய்து கொண்டு பேசுங்கள்.”

‪#‎மனசுல_பட்டதை_பேசிடுவோம்‬.

என்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவரும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

Related articles

Recent articles

spot_img