காவல் நிலையதில் பிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்ட பெண் உதவி ஆய்வாளர் : வாலிபர் கைது

 

கோவை மாவட்டம் அன்னூர் காவல் லையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஹேமலதா காவல் நிலைய வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்தனர். உதவி காவல் ஆய்வாளரான ஹேமலதா (வயது 44). இவருக்கும், அசோக்குமார் என்பவருக்கும் 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 15 வயதில் மகன் உள்ளார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஹேமலதா கணவரிடம் இருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றார். பின்னர் போலீஸ் நண்பர்கள் குழுவில் பணியாற்றிய பாலசந்தர் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் குடும்பம் நடத்திவந்தார்.

அன்னூர் அருகே நேற்று முன்தினம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. அங்கு ஹேமலதா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த பணி முடிந்ததும் இரவு 8 மணிக்கு காவல் நிலையம் சென்றார். பின்னர் அவர், காவல் நிலைய வளாகத்தில் இருக்கும் பழைய காவல் நிலைய கட்டிடத்துக்கு சென்றார். சிறிது நேரத்தில் காவல் நிலையத்துக்கு வந்த அவர் திடீரென்று வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

உடனே சக போலீஸ்காரர்கள் ஓடிச்சென்று அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்தபோது லேசாக நினைவு வந்த ஹேமலதா, அவர்களிடம் தான் விஷம் குடித்துவிட்டதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக ஹேமலதா கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். ஹேமலதா தற்கொலை குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories