ஜனவரி 9ம் தேதி தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்

Published:

 
தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் ஜனவரி 9ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணியளவில், பெரம்பலூரில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து இக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும் இக்கூட்டத்தில் தலைமை நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், செயலாளர்கள், துணை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், உட்பட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. எந்த அணிக்கு போகும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் பெரம்பலூரில் ஜனவரி 9-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டதக்கது.

Related articles

Recent articles

spot_img