மத்திய அமைச்சரை பதம் பார்த்த ஜல்லிக்கட்டு காளை

Published:

 
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் அரியலுார் மாவட்டம், பாளையப்பாடி மற்றும் அரியலுாரில்நடந்த பாரதீய ஜனதா கட்சியின் கேந்திரிய கூட்டத்தில் பங்கேற்க, திருச்சியில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அரியலுார் மாவட்டம் குலமாணிக்கம் அருகே உள்ள செம்பியக்குடி கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி அளிக்க வலியுறுத்தி, அவரை சந்தித்து மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு மாடுகளையும் உடன் அழைத்து வந்திருந்தனர்.அப்போது, பொன். அமைச்சர் ராதா கிருஷ்ணன், ஜல்லிக்கட்டு மாட்டின் மூக்கணாங் கயிறு பிடித்து மாடுகளை பார்வையிட்டபோது , காளை திமிறியதில் அவரது வலது உள்ளங்கையில் லேசான காயம் ஏற்பட்டது.
தகவலறிந்த திருமானுார் வட்டஅரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் பாளையப்பாடியில் நடந்த கூட்டத்துக்கு நேரில் வந்து அமைச்சருக்கு சிகிச்சை அளித்தனர். நடைபெற்ற சம்பவத்தால் அப்குதியில் பெரும் பரபரப்புஏற்பட்டது

Related articles

Recent articles

spot_img