முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு உழல் மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி மாற்றப்பட்டு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை வருகிறது .
உச்ச நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முதலில் விசாரித்து வந்தது.
சுப்ரீம் கோர்ட்டின் இணைய தளத்தில் இந்த வழக்கு விசாரணை குறித்து நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நீதிபதி ஆர்.கே.அகர்வால் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக நீதிபதி அமிதவ ராய் நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. எனவே இனிமேல் நீதிபதிகள் பினாகி சந்திரகோசும், அமிதவ ராயும் மேல்முறையீட்டு வழக்கை விசாரிப்பார்கள்.
சொத்துகுவிப்பு உழல் வழக்கின் மேல்முறையீட்டில் மு
முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட 4 பேரை விடுதலை செய்து கடந்த ஆண்டு மே 11–ந்தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது.
தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பிலும் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர, லெக்ஸ் பிராபர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட 6 நிறுவனங்களை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடக உயர் நீதிமன்றம் விடுவித்ததற்கு எதிராகவும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோர் தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. மேலும் கர்நாடக அரசு தரப்பிலும், அன்பழகன் தரப்பிலும் எதிர்பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இப்படி பதில் மனு மற்றும் எதிர்பதில் மனுக்கள் தாக்கல் முடிவடைந்த நிலையில், தற்போது முழு அளவிலான இறுதி விசாரணைக்கு வழக்கு தயாராக உள்ளது.
கடந்த நவம்பர் 11–ந்தேதியன்று நடைபெற்ற விசாரணையின் போது, அடுத்த விசாரணைக்கான தேதியை முடிவு செய்த பிறகு அன்றாட அடிப்படையில் இறுதி விசாரணையை மேற்கொள்ள அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். எனவே, இன்று முதல் வழக்கு விசாரணை தினந்தோறும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
Related News Post: