காவல்துறையின் அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின். திமுக பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் முகனூலில் பதிவு செய்துள்ள கருத்து… வேளாண்மை பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கழகத்தின் சார்பில் கோரிக்கை வைத்தும் இதுவரை அ.தி.மு.க அரசு அந்த விசாரணையை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கவில்லை. தற்போது நடந்து வரும் சி.பி.சி.ஐ.டி விசாரணையில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லை. அதை விட இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி என்ற விசாரணை அமைப்பிற்கு உள்கட்டமைப்பு வசதிகளோ அல்லது போதிய எண்ணிக்கையில் போலீஸ் அதிகாரிகளோ – ஏன் இது போன்ற வழக்குகளை விசாரிக்கும் அளவிற்கு மன உறுதியோ அந்த அமைப்பிற்கு இருப்பதாகத் தெரியவில்லை. தற்போது மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் நீதிபதி அவர்கள் “சி.பி.சி.ஐ.டி. அமைப்பின் புலனாய்வு திறமை” பற்றியே சந்தேகம் எழுப்பியுள்ளார். குறிப்பாக வருமான வரித்துறையின் ஓய்வு பெற்ற இணை ஆணையர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இரட்டைக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பத்து வருடமாகியும் சி.பி.சி.ஐ.டி.யால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் இப்படிப்பட்ட கருத்தைக் கூறியுள்ள நீதிபதி அவர்கள், “இந்த சூழ்நிலையில் சி.பி.ஐ. விசாரணை கோருவதைத் தவிர தமிழக மக்களுக்கு வேறு வழி என்ன இருக்கிறது?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். சி.பி.சி.ஐ.டி. அமைப்பின் விசாரணை திருப்திகரமாக இல்லை என்பது ஒரு புறமிருக்க, அ.தி.மு.க. அமைச்சர்கள் தொடர்ந்து அதிகாரிகளை சட்டவிரோதமான காரியங்கள் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலைமையோ முற்றிலும் சீர்குலைந்து விட்டது. ஆளுங்கட்சியை விமர்சிப்பவர்கள் மீது அ.தி.மு.க. அரசு காவல்துறையைப் பயன்படுத்தி அடக்குமுறை ஏவுகிறது. இது போன்ற அடக்குமுறைக்கும், தவறான காரியங்களுக்கும் காவல்துறையைப் பயன்படுத்தும் அ.தி.மு.க. அரசுக்கும் தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆட்சியில் நடக்கும் அதிகாரிகளின் மரணங்களுக்கு நீதி கிடைக்காமல் போவதை தி.மு.க என்றைக்கும் அனுமதிக்காது. வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் நீதி கிடைக்கும் வரை திராவிட முன்னேற்றக் கழகம் அயராது போராடும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...
சற்றுமுன்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...
அரசியல்
இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!
துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?
நெல்லை
தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!
தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...
சற்றுமுன்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...
அரசியல்
இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!
துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?
நெல்லை
தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!
தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
சற்றுமுன்
நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சற்றுமுன்
₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?
சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
Entertainment News
Previous article
Next article

