டிரைவர் துாங்கியதால் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து : 10பேர் பலி : 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Published:

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே, பிளாக்கோட்டைபாறையில் தனியார் சொகுசுப் பேருந்து சாலை தடுப்பு தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலியாயினர். டிரைவர் துாங்கியதே விபத்துக்கான காரணம் என விசாரனையில் தெரியவந்துள்ளது.
20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் நெல்லை- நாகர்கோவில் நான்கு வழிச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img