பாஜக., சொல்லவேண்டியதை பாண்டியராஜன் சொல்கிறார்! மத்திய அரசின் முத்ரா கடன் பெற்றதில் தமிழகம் முதலிடம்!

mafoi pandiarajan - 2026

முத்ரா கடன் பெற்றதில் தமிழகம் முதலிடம் என்றும், தமிழர்களுக்கு ரூ. 72 ஆயிரம் கோடி கடன் வழங்கப் பட்டுள்ளதாகவும் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து விரிவான தகவல்களுடன் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தொழில் முனைவோர் மற்றும் தொழில்துறையில் தனது மாஃபா நிறுவனம் மூலம் வழிகாட்டியாகத் திகழ்ந்த பாண்டியராஜன் தற்போதும் அந்தப் பணியை டிவிட்டர் மூலம் செய்கிறார். ஆனால் உண்மையில் இந்தப் பணி, தமிழக பாஜக.,வினர் செய்ய வேண்டிய பணி என்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

எஸ்எம்எஸ்இ – சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY). இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency(MUDRA) மூலமாக செயல்படுத்தப் படுகிறது.

முத்ரா வங்கி என்பது மத்திய அரசின் திட்டம்! இத்திட்டத்தின் கீழ் சிசு, தருண், கிசோர் என மூன்று வகை பிரிவுகள் மூலம், ஐம்பதாயிரம் ரூபாய் முதல் பத்து இலட்சம் ரூபாய் வரை சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்க்கு எளிமையான வகையில் கடன் வசதி வழங்கப்படுகிறது.

முத்ரா வங்கி மூலம் சிறு மற்றும் குறுந் தொழில் உற்பத்தி நிறுவனங்கள், சிறிய வணிகக் கடைகள், பழங்கள் காய்கறி விற்பனையாளர்கள், அழகு மையங்கள், வாகன ஓட்டிகள், நடைபாதை வணிகர்கள், கைவினைக் கலைஞர்கள், இளைஞர்கள், படித்தவர்கள் மற்றும் மகளிர் தொழில் முனைவோர் என பலரும் நிதியுதவி பெறுகின்றனர்.

2014ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தொழில்முனைவோர் 100 பேர் கடன் கோரி வங்கிகளில் விண்ணப்பித்தால், 4 பேருக்கு மட்டுமே கிடைக்கும். இப்பொழுது அந்த நிலை இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த குறுந்தொழில் முனைவோர் பலர் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் இதுவரை ரூ.7 லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மட்டும் ரூ.72 ஆயிரம் கோடி கடன் பெற்று முதலிடத்தில் உள்ளது. அதாவது முத்ரா திட்ட மொத்த நிதியில் 10% தமிழகத்திற்கு மட்டும் கொடுக்கப் பட்டுள்ளது.

அடுத்த இடத்தில் ரூ.70 ஆயிரம் கோடி கடன் பெற்று கர்நாடகா இரண்டாம் இடத்திலும், அடுத்து மகாரஷ்டிரம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories