December 5, 2025, 8:18 PM
26.7 C
Chennai

பாஜக., சொல்லவேண்டியதை பாண்டியராஜன் சொல்கிறார்! மத்திய அரசின் முத்ரா கடன் பெற்றதில் தமிழகம் முதலிடம்!

mafoi pandiarajan - 2025

முத்ரா கடன் பெற்றதில் தமிழகம் முதலிடம் என்றும், தமிழர்களுக்கு ரூ. 72 ஆயிரம் கோடி கடன் வழங்கப் பட்டுள்ளதாகவும் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து விரிவான தகவல்களுடன் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தொழில் முனைவோர் மற்றும் தொழில்துறையில் தனது மாஃபா நிறுவனம் மூலம் வழிகாட்டியாகத் திகழ்ந்த பாண்டியராஜன் தற்போதும் அந்தப் பணியை டிவிட்டர் மூலம் செய்கிறார். ஆனால் உண்மையில் இந்தப் பணி, தமிழக பாஜக.,வினர் செய்ய வேண்டிய பணி என்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

எஸ்எம்எஸ்இ – சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY). இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency(MUDRA) மூலமாக செயல்படுத்தப் படுகிறது.

முத்ரா வங்கி என்பது மத்திய அரசின் திட்டம்! இத்திட்டத்தின் கீழ் சிசு, தருண், கிசோர் என மூன்று வகை பிரிவுகள் மூலம், ஐம்பதாயிரம் ரூபாய் முதல் பத்து இலட்சம் ரூபாய் வரை சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்க்கு எளிமையான வகையில் கடன் வசதி வழங்கப்படுகிறது.

முத்ரா வங்கி மூலம் சிறு மற்றும் குறுந் தொழில் உற்பத்தி நிறுவனங்கள், சிறிய வணிகக் கடைகள், பழங்கள் காய்கறி விற்பனையாளர்கள், அழகு மையங்கள், வாகன ஓட்டிகள், நடைபாதை வணிகர்கள், கைவினைக் கலைஞர்கள், இளைஞர்கள், படித்தவர்கள் மற்றும் மகளிர் தொழில் முனைவோர் என பலரும் நிதியுதவி பெறுகின்றனர்.

2014ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தொழில்முனைவோர் 100 பேர் கடன் கோரி வங்கிகளில் விண்ணப்பித்தால், 4 பேருக்கு மட்டுமே கிடைக்கும். இப்பொழுது அந்த நிலை இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த குறுந்தொழில் முனைவோர் பலர் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் இதுவரை ரூ.7 லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மட்டும் ரூ.72 ஆயிரம் கோடி கடன் பெற்று முதலிடத்தில் உள்ளது. அதாவது முத்ரா திட்ட மொத்த நிதியில் 10% தமிழகத்திற்கு மட்டும் கொடுக்கப் பட்டுள்ளது.

அடுத்த இடத்தில் ரூ.70 ஆயிரம் கோடி கடன் பெற்று கர்நாடகா இரண்டாம் இடத்திலும், அடுத்து மகாரஷ்டிரம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories