February 24, 2026, 10:46 AM
25.7 C
Chennai

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு ஊழல் மேல்முறையீட்டு வழக்கின் முக்கிய அம்சங்கள் : கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு ஊ ழல் மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை தொடர்பாக கர்நாடக அரசு நேற்று முக்கிய அம்சங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
 
சொத்து குவிப்பு ஊ ழல் வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட 4 பேரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மற்றும் தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் 6 நிறுவனங்களை வழக்கில் இருந்து விடுவித்ததற்கு எதிராகவும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது. கடந்த 8–ந் தேதி நீதிபதிகள், ஒவ்வொரு தரப்பும் வாதங்களின் முக்கிய அம்சங்களை எழுத்துவடிவில் 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
 
கர்நாடக அரசு வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாடில் நேற்று முக்கிய அம்சங்களை தாக்கல் செய்யதில் கூறப்பட்டுள்ளதாவது:–
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுதாக ஏற்றுக்கொண்டாலும் அதில் உள்ள கணக்கு பிழையால் சொத்து விவரங்களின் மதிப்பு தவறாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணானந்த் அக்னிகோத்ரி வழக்கின் அடிப்படையில் குற்றவாளிகளை விடுதலை செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.
 
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கப்பட்ட கடன்களை கணக்கில் எடுத்தும் தவறு நேர்ந்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் பல பிழைகள் சரி செய்யப்படவில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனங்களின் சொத்துகள் குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துகள் அல்ல என்று உயர் நீதிமன்றம் கூறியிருப்பது தவறானதாகும்.
 
குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்து கணக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற தீர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ள கணக்கு விவரங்கள் தவறாக உள்ளன.இதுபோல பல்வேறு முக்கிய முரண்பாடுகள் அதில் பட்டியலிடப்பட்டுள்ளன.ஜெயலலிதா உள்ளிட்டோர் தரப்பில் முக்கிய அம்சங்கள் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை.
 
ஏற்கனவே நீதிபதிகள் உத்தரவிட்டபடி இந்த மனுக்களின் மீதான விசாரணை பிப்ரவரி 2–ந் தேதி தொடங்குகிறது. 3 மற்றும் 4–ந் தேதிகளில் விசாரணை நடைபெறும் என்றும், மேலும் விசாரணையை தொடருவது குறித்து 4–ந் தேதி முடிவெடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

Entertainment News

Popular Categories